நயன்தாரா கையை உதறி சென்ற விக்னேஷ் சிவன்..! முகம் வாடிய நயன்தாரா..! வைரல் வீடியோ..!

மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை நயன்தாரா தமிழ் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றவர்.

இவர் தனது கேரியரில் பல்வேறு வெற்றி படங்களை தந்ததை அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தருகின்ற கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது பேன் இந்திய நடிகையாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகை நயன்தாரா மும்பையில் நடந்த அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு சென்று இருக்கிறார்.

நடிகை நயன்தாரா..

சர்வதேச அளவில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த திருமணத்திற்கு லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இருவரும் சென்று இருக்கிறார்கள். உலகமே வியந்து பார்க்கக் கூடிய அளவு என்ற திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடந்திருந்தது.

அங்கு நடந்த பிரம்மாண்ட திருமணத்தை பார்க்க சென்ற இவர்களை பல மீடியாக்கள் கவர் செய்து போட்டோ எடுப்பதற்காக முயற்சி செய்த நிலையில் நயன்தாரா தனது கணவர் கையை விடாமல் பிடித்துக் கொண்டு சிரித்த முகத்துடன் போஸ் தந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஊடகத்துறையைச் சார்ந்த நண்பர்கள் அனைவரும் நயன்தாராவை தனித்து போஸ் கொடுக்க வேண்டியதை அடுத்தும் அவர் அதை விரும்பாமல் கணவரோடு ஜோடி போட்டு நிற்பதை தவிர்க்காமல் இருந்தார்.

நயன் கையை உதறி சென்ற விக்னேஷ் சிவன்..

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் விக்னேஷ் சிவன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நயனின் கையை உதறி விட்டு தனியாக போஸ் கொடுக்கும் படி சொல்லிவிட்டு அதுவரை தான் காத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.

இப்படி திடீரென்று தனது கணவர் தன் கைகளை விட்டு விட்டு போஸ் கொடுக்க சொல்லுவார் என்பது தெரியாமல் முகம் வாடிய நிலையில் அவர் தனியாக பல போஸ்களை தந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து நயன்தாரா சற்று சங்கடத்தோடு தான் தனித்து போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த் குடும்ப சகிதமாக சென்றதோடு மட்டுமல்லாமல் குத்தாட்டம் போட்ட விஷயம் இணையங்களில் வைரலானது.

வாடிய முகத்தோடு போஸ் தந்த நயன்..

மேலும் இந்த திருமணத்தில் இயக்குனர் அட்லி அவரது மனைவி கலந்து கொண்டிருந்த விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அதுவும் அட்லியின் மனைவி பிரியாவின் ஜாக்கெட்டில் ஆனந்த் ஆர்மி என்று எழுதி இருந்த விஷயம் விமர்சனத்திற்கு உள்ளானது.

அது போலவே தற்போது நயன்தாராவின் கைகளை உதறிச்சென்ற விக்னேஷ் சிவனின் செயலும் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு விக்னேஷ் சிவன் இந்த மாதிரி செய்திருக்க வேண்டாம் என்ற ரீதியில் பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

மேலும் பிரபல நட்சத்திர ஜோடிகளை இரிடேட் ஆகக்கூடிய விதத்தில் ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் நடந்து கொண்டார்களா? என்ற கேள்வியை எழுப்பி உள்ள இந்த விஷயமானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருவதால் இந்த விஷயம் குறித்து ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருவதோடு இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்