இரண்டு மகள்களையும் நினைத்து கண்ணீர் சிந்தும் கமல்ஹாசன்.. அட கொடுமைய..!

இந்தியத் திரைப்படத்தில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் உலக நாயகன் கமலஹாசன் பல நடிகர்களுக்கு நடிப்பை கற்றுக் கொடுத்த என்சைக்ளோபீடியா என்று சொல்லலாம்.

திரை உலகில் நடிக்க வரும் பலருக்கும் முன் உதாரணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான புதிய தொழில்நுட்ப யுத்திகளை திரை உலகில் புகுத்தி அளப்பரிய சாதனைகளை செய்தவர்.

உலகநாயகன் கமலஹாசன்..

திரை உலகில் பல சாதனைகளை செய்த உலகநாயகன் கமலஹாசன் தனது மண வாழ்க்கையில் இரண்டு முறை திருமணத்தை செய்து கொண்டு தோல்வியை தழுவியதோடு மட்டுமல்லாமல் மூன்றாவது முறை லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து அதுவும் ஒத்துவராமல் தற்போது தனித்து வசித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த பிறகு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்று இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையானார். தற்போது இவர்களும் திரைத்துறையில் வலம் வந்த போதும் கமலஹாசனை போல ஜொலிக்கவில்லை.

இந்நிலையில் 25 வயதுக்கு மேல் ஆகும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் இன்று வரை திருமணம் பற்றி எந்த ஒரு முடிவினையும் எடுக்காமல் கமலஹாசன் இருந்து வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அது மட்டுமில்லாமல் பெண் பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் திருமணம் செய்து வைப்பது அவசியம் என்பது கூற தெரியாமலா கமலஹாசன் இருப்பார் என்ற ரீதியில் பலரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இரண்டு மகள்களை நினைத்து கண்ணீர் சிந்தும் கொடுமை..

இந்நிலையில் ஊரில் உள்ள அனைத்து பிரபலங்களின் வீட்டிலும் மங்கள வாத்தியம் கேட்கிறது. அது போல காலாகாலத்தில் தங்களுடைய வாரிசுகளுக்கு திருமணத்தை செய்து விடுகிறார்கள்..

சமீபத்தில் மாற்றுத்திறனாளியாக இருக்கும் தன்னுடைய மகனுக்கு கூட பிரபல நடிகர் ஒருவர் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து விட்டார்.

ஆனால், உங்கள் மகள்களுக்கு எப்போது திருமணம்…? என்று கமல்ஹாசன் அவர்களின் காதுபடவே அவருடைய நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள்.

நான் பெற்ற மகள்களாக இருந்தாலும் அவர்களுடைய திருமண வாழ்க்கையில் தலையிட எனக்கு உரிமை இல்லை என்று தன்னுடைய பாணியில் பேசி சமாளிக்கிறார் கமல்ஹாசன் என்று கூட கூறுகிறார்கள்.

அடடா நிலைமை இப்படியா போகணும்..

ஆனாலும், ஒரு அப்பாவாக தன்னுடைய கடமையை செய்ய வேண்டியது அவருடைய வேலை இல்லையா..? என்ற பேச்சுக்கள் இணைய பக்கங்களில் எழுந்துள்ளது.

இதனால் கமல்ஹாசன் கண்ணீர் விடாத குறையாக வேதனையில் இருப்பதாகவும் கூட குறைந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு தன் கடமையை செய்ய முடியாமல் தவித்து வரும் கமலஹாசனுக்கு ஆறுதல் சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் விரைவில் நல்ல செய்தி தருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.