இதை செஞ்சு தான் பட வாய்ப்பை பெற்றேன்.. நடிகை கயல் ஆனந்தி பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

தெலுங்கு திரைப்படமான பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தில் 2012-ஆம் ஆண்டு அறிமுகமானவர் ஆனந்தி. முதல் படத்திலேயே தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தெலுங்கில் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் 2013-ஆம் ஆண்டு பிரியத்தமா நீவசட குசலமா என்ற தெலுங்கு படத்தில் பிரீத்தி என்ற கேரக்டரை பக்காவாக செய்திருந்தார். இதனை அடுத்து 2014-ஆம் ஆண்டு கிரீன் சிக்னல் என்ற படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

நடிகை கயல் ஆனந்தி..

தமிழைப் பொறுத்த வரை ஆனந்தி வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இந்த படத்தில் தனது வித்தியாசமான கேரக்டரை பக்காவாக செய்ததை அடுத்து பிரபு சாலமன் இயக்கிய வெற்றி திரைப்படமான கயல் திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

மேலும் இந்த படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தன் பெயருக்கு முன்னால் இந்த படத்தை அடைமொழியாக போட்டுக்கொண்டு கயல் ஆனந்தியாக இன்று விளங்குகிறார்.

மேலும் கயல் படத்தை அடுத்து அடுத்தடுத்து பல தமிழ் திரைப்படங்கள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ரூபாய், மன்னர் வகையறா, பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து மங்கை படத்தில் நடித்த இவர் மங்கை பட தயாரிப்பாளரான சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்ததை எடுத்து அந்த படத்தின் வெளியீடு அப்படியே நிறுத்தப்பட்டது.

இத செஞ்சுதான் பட வாய்ப்பு பெற்றேன்..

இதனை அடுத்து இவர் எந்த வகையில் இந்த படத்திற்காக சம்பளம் பெற்றார் என்பது போன்ற விவரங்களை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அது குறித்த விஷயங்களும் இணையங்களில் பரவியது.

மேலும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய கயல் ஆனந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது திருமணம் ஆன உடனே தான் கர்ப்பம் தரித்து விட்டதாக சொல்லி இருக்கிறார்.

அந்த நேரத்தில் எனக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது.அத்துடன் அந்த கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையை தவற விடக்கூடாது என யோசித்தேன்.

கர்ப்பமாக இருக்கிறேன் என கூறினால் பட வாய்ப்பு கிடைக்காது என்பதால் என்னுடைய கர்ப்பத்தை மறைத்து படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என பேசி இருக்கிறார்.

விளாசித் தள்ளும் ரசிகர்கள்..

நடிகை கயல் ஆனந்தி சொன்ன இதனை கேட்ட ரசிகர்கள் பட வாய்ப்புக்காக கர்ப்பமாக இருப்பதை மறைக்க வேண்டுமா? ஆர்வமாக இருக்கிறேன் என கூறி விட்டு படத்தில் நடித்திருக்கலாமே..

அப்படி கூறும் போது படக்குழு அதற்கு தேவையான முன்னுரைப்பாளர்களை செய்து வைத்திருப்பார்கள். அதற்கு ஏற்ப படப்பிடிப்பு மற்றும் காட்சிகளை மாற்றிக் கொள்வார்கள்.

ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருப்பதையே மறைத்து பட வாய்ப்பு பெற்று இருக்கிறீர்கள். இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா? என்று விளாசி வருகின்றனர்.

இதனை அடுத்து எந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இது பற்றிய விவரங்கள் அனைத்தையும் அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் அதிக அளவு படிக்கின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

அத்தோடு வேறு சில ரசிகர்களும் சினிமா ஆசை கயல் ஆனந்தியின் கண்களை கட்டி விட்டது என்பது போல விமர்சனங்களை செய்து இருக்கிறார்கள். மேலும் இனி மேலாவது அவர் பட வாய்ப்புக்காக இப்படி பொய் சொல்லாமல் இருக்க வேண்டும்.