வாழைக்காய் வச்சி பண்ணா எப்படி இருக்கும்.. முதல் முறை பண்ணும் போது.. டிக்டாக் இலக்கியா ஓப்பன் டாக்..!

சமூக வலைதளம் மூலமாக பிரபலமாகி விட முடியும் என்று நினைத்து வழி மாறிப் போனவர்கள் நிறைய பேர் உண்டு. பொதுவாக சமூக வலைதளம் ஒரு பக்கம்  உண்மைகளை உடனுக்குடன் அறிவதற்கு உதவுகிறது என்றாலும் மறுபக்கம் தீமைகளையும் செய்து வருகிறது.

யாராவது ஒருவர் குற்றம் செய்யும் பொழுது அதை வீடியோ எடுத்து எளிதாக சமூக வலைதளங்களில் பரப்பி விடமுடியும். எனவே குற்றம் செய்யும் நபர்கள் அவ்வளவு எளிதாக தப்பிவிட முடியாது. அதே சமயம் சமூக வலைதளம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று நினைக்கும் பலர் அதன் மூலம் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

சமூக வலைத்தள மோகம்:

நிறைய ஆபத்தான பகுதியில் செல்பி எடுக்கிறேன் என்று உயிரிழந்தவர்களை அடிக்கடி செய்திகளில் பார்க்க முடிகிறது. அதேபோல அதிக லைக் வாங்குவதற்காக எல்லை மீறி செல்லும் ஆட்களும் சமூக வலைதளங்களில் இருக்கின்றனர்.

 

அப்படி தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டவர்தான் பிரபல டிக் டாக் பிரபலமான இலக்கியா. டிக் டாக் செயலி தமிழகத்தில் பிரபலமாக இருந்த காலகட்டங்களில் இலக்கியாவும் அதே அளவிற்கு பிரபலமாக இருந்தார்.

டிக் டாக் செயலியில் தொடர்ந்து கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார் டிக் டாக் இலக்கியா. அதன் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக முடியும் என்று அவர் நினைத்து வந்தார்.

ஆனால் தமிழ் சினிமாவில் எப்போதுமே கவர்ச்சியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நடிகைகளுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைத்தது கிடையாது. அந்த வகையில் இலக்கியாவிற்கும் நிறைய அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் இருந்ததே தவிர வாய்ப்புகள் என்பது வரவில்லை.

டிக் டாக் மூலம் பிரபலம்:

அதனை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று கவர்ச்சி நடனங்கள் ஆடி அங்கு சம்பாதித்து வந்து கொண்டிருக்கிறார் இலக்கியா. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய டிக் டாக் இலக்கியா கூறும் பொழுது இணையபகங்களில் ஆரம்பத்தில் நான் கவர்ச்சி காட்டாமல்தான் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால் ஒரு பாடலில் எனக்கே தெரியாமல் நான் தொடர்ச்சியாக நடனமாடியிருந்தேன். அந்த வீடியோவிற்கு நிறைய வீவ்ஸ் போனது. எனக்கு நிறைய பாலோவர்ஸ் கிடைத்தார்கள். இதனை தொடர்ந்து அதே போல வீடியோக்களை செய்ய ஆரம்பித்தேன்.

நாட்கள் செல்ல செல்ல வித்தியாசமாக வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் ஒரு கவர்ச்சி பாடலுக்கு வாழைக்காயை கையில் வைத்துக்கொண்டு நடனம் ஆடினேன். அந்த பாடலுக்கு வாழைக்காய் வச்சு பண்ணா எப்படி இருக்கும் என்று யோசித்தேன்.

முதல் முறை வாழைக்காயை கையில் வைத்துக்கொண்டு வீடியோ பண்ணும் பொழுது மிகவும் கூச்சமாக இருந்தது. ஆனால் ஒரு வழியாக அந்த வீடியோவை படமாக்கி முடித்தேன் அந்த வீடியோதான் என்னை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது என பேசி இருக்கிறார் டிக் டாக் இலக்கியா.