குழந்தை பெத்துக்க முடியுமா..? அருவருப்பா இருக்கு.. ஒரு பொண்ணு வாழ்கையை கெடுக்காதிங்க..!

தமிழ் திரையுலகில் ஆஜானுபாகுவாக சிவப்பு நிறத்தில் பலரையும் சுண்டி இழுக்க கூடிய வகையில் தனது எதார்த்த நடிப்பு திறனை வெளிப்படுத்திய நடிகர் நெப்போலியன்.

இவர் தனது சீரான நடிப்பை தமிழ் படங்களில் காட்டியதை அடுத்து வில்லனாக இருந்த இவர் ஹீரோவாக பிரமோஷன் ஆனார். இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

குழந்தை பெத்துக்க முடியுமா?..

இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்கிய தனது அற்புத ஆற்றலினால் அரசியல் வாழ்க்கையிலும் ஜொலிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து ஜெயசுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் தனுஷ் என்பவர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து 10 வயதுக்கு மேல் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து ஆங்கிலம் மருத்துவத்தை பார்த்தார்.

எனினும் ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லாத இந்த நோய்க்கு திருநெல்வேலியில் இருக்கும் பாரம்பரிய மருத்துவ மனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று ஓரளவு நோயின் தாக்கத்திலிருந்து தனது மகனை பாதுகாத்தார்.

மேலும் தனது மூத்த மகனுக்காக திரையுலக வாழ்க்கையும், அரசியல் வாழ்க்கையும் உதறி தள்ளி விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.அத்துடன் தற்போது தனது மூத்த மகன் தனுசுக்கு திருநெல்வேலியில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க போகிறார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை தனது மகனுக்கு மணமுடிக்க உள்ள நெப்போலியன் திருமணத்திற்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

மேலும் இவரின் மகன் திருமணம் ஜப்பானில் இருக்கும் டோக்கியோவில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த திருமணம் குறித்து பிரபல டாக்டர் காந்தராஜ் சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

இதில் நெப்போலியன் கே என் நேருவின் மூலம் திரையுலகம் மட்டுமல்லாமல் அரசியல் பிரவேசத்தையும் செய்தவர் என்ற கருத்தை சொல்லி இருந்தார்.

மேலும் நெப்போலியன் மகன் தனுஷுக்கு வந்திருக்கும் நோயானது பாரம்பரிய நோய் ஆங்கில மருத்துவத்தில் இதற்கு மருந்துகள் ஏதும் இல்லாத நிலையில் இவர் இத்துணை வயது வரை வாழ்ந்து இருப்பதே மிகவும் பெரிய அதிசயம் என்று சொல்லி இருக்கிறார்.

திருமண வாழ்க்கைக்கு தகுதியற்ற இவருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்ற கருத்தையும் சொல்லி இருக்கிறார்.

இந்த விஷயம் தெரிந்து தான் அந்தப் பெண் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாரா? அல்லது அவர்கள் குடும்பமும் இதற்கு ஓகே சொன்னதா? என்பது தனக்கு தெரியாது என்பதையும் சொல்லி இருக்கிறார்.இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அருவருப்பா இருக்கு..

அதுபோலவே உலக அழகி ஐஸ்வர்யா ராய் பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் ஹிந்தி படங்களிலும் அதிக அளவு நடித்தவர்.

அண்மையில் மணிரத்தினத்தின் வரலாற்று காவியமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்து அசத்தியது உங்களுக்கு மிக நன்றாக நினைவில் இருக்கும்.

 

இவர் சல்மான்கான் உடன் உறவில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் அவரோடு எடுத்த புகைப்படங்கள் எப்படி தெரியாமல் வெளி வந்தது.

இதனை அடுத்து திருமணம் ஆன ஒரு பெண்ணை அதுவும் ஒரு பெண் குழந்தைக்கு தாயான பிறகும் இப்படி எல்லாம் விமர்சனங்கள் செய்வது சரியாகுமா? என்று பதிலடி தந்திருக்கிறார்.

மேலும் இது போன்ற விஷயங்கள் சமூகங்களில் நடப்பது தனக்கு அருவருப்பாக உள்ளது என ஐஸ்வர்யா ராய் பேசி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிகள் தள்ளி உள்ளது.

ஒரு பெண் வாழ்க்கையை கெடுக்காதீங்க..

இப்படி ஒரு பக்கம் ஐஸ்வர்யா ராய் பற்றிய தவறான விமர்சனங்கள் வெளி வருவதும் மறுபக்கம் நெப்போலியன் மகனின் நிலை அறிந்து கொண்டு உண்மையில் அந்தப் பெண் ஓகே சொன்னாரா? இல்லை என்ன அவர்களுக்குள் நடந்தது என்று தெரியாமல் இருக்கின்ற விஷயமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் முந்தைய பேட்டிகளில் அனைத்து விஷயமும் தெரிந்து தான் நெப்போலியன் மகனை அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ள சம்மதித்து இருப்பதாக சில விஷயங்கள் வெளி வந்துள்ளதும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்