ஜப்பான் திருமணத்தின் ரகசியம்.. மனைவி இல்லை வெறும் செவிலியர் தான்.. இது கல்யாணமே அல்ல.. விளாசும் பிரபலம்..!

தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமான கே என் நேருவின் நெருங்கிய உறவினரான நடிகர் நெப்போலியன் பின்னாடி ஹீரோவாக பல படங்களில் நடித்து அசத்தியதோடு அரசியலிலும் களம் கண்டு வெற்றி அடைந்தவர்.

இந்நிலையில் திரை உலகில் பீக்கில் இருக்கும் போதே ஜெயசுதா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்று இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

ஜப்பான் திருமணத்தின் ரகசியம்..

நடிகர் நெப்போலியனின் மூத்த மகனான தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை அடுத்து 10 வயதுக்கு மேல் நடக்க முடியாமல் போகும் என்று சொன்னதோடு அதற்கு மேல் அவர் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த வியாதிக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லை என்பதால் திருநெல்வேலியில் பாரம்பரிய மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து நோயின் தாக்கத்தை குறைத்துக் கொண்ட இவர் தன் மகனுக்காக சினிமா மற்றும் அரசியலை விட்டு அமெரிக்கா சென்றார்.

மேலும் அமெரிக்காவில் சொந்தமாக ஐடி கம்பெனியை நடத்தியதோடு விவசாயத்திலும் ஈடுபட்டு வரும் இவர் அங்கு தன் மகனின் படிப்பு மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்து மிகச் சிறந்த தந்தையாக விளங்குகிறார்.

மனைவி இல்லை வெறும் செவிலியர் தான் கல்யாணமே அல்ல..

இந்நிலையில் தற்போது தனுஷ் 25 வயதை எட்டிப் பிடித்துள்ள நிலையில் இவருக்கு திருநெல்வேலியில் பெண் பார்த்து ஜப்பானில் திருமணம் நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். இவர்களது திருமணம் நவம்பர் மாதத்தில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.

இந்த திருமணம் நெப்போலியன் செய்த மிகப்பெரிய தில்லுமுல்லு இந்த திருமணத்தால் அந்த பெண்ணின் இளமை வீணாக போகிறது. அத்துடன் பணத்துக்காக நடக்க இருக்கும் திருமணம் தான் இந்த திருமணம் என தமிழா தமிழா பாண்டியன் விளாசி தள்ளி இருக்கிறார்.

மேலும் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் இருக்கும் தனுஷை திருமணம் செய்து கொள்ளக் கூடிய பெண்ணுக்கு எதிர்காலத்தில் அவர்களது சொத்து முழுவதும் கிடைக்கும் என்பது அவர்கள் பெற்றோர்களுக்கு தெரிந்ததை அடுத்து தான் தங்கள் பெண்ணை தாரை வைத்து கொடுக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழா தமிழா பாண்டியன் விளாசல்..

வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திருநெல்வேலியில் நடந்து முடிந்த நிச்சயதார்த்தத்தை அடுத்து விரைவில் திருமணம் ஜப்பானில் நடக்க இருக்க கூடிய ரகசியத்தை பற்றி சில விஷயங்களை சொன்னார்.

தனுஷின் திருமணம் அமெரிக்காவில் நடந்தால் அது செல்லுபடியாகது என்பதால் தான் ஜப்பானில் வைத்து இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவலை கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து எந்த விஷயமானது தற்போது இணையங்களில் பைரதாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அத்தோடு மனைவி என்ற அந்தஸ்தில் இருக்கும் செவிலியர் ஆகத்தான் அந்தப் பெண் இருப்பார் என்ற திடுக்கிடும் தகவலையும் சொல்லிவிட்டார்.

மேலும் இணையங்களில் கலவை ரீதியான விமர்சனங்கள் வந்துள்ளதோடு மட்டுமல்லாமல் இது குறித்து உண்மை நிலை என்ன என்பதை பெண் வீட்டார் சொன்னால் மட்டுமே அனைவருக்கும் புரியும் என்பது தெரிய வந்துள்ளது.