அமைச்சருடன் மீனா உறவு.. தாய் 8 மகள் 16 அடி.. போதையால் சீரழிந்த வாழ்க்கை.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான நடிகை மீனா தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டவர்.

இவர் தமிழில் ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து பல்வேறு விருதுகளை பெற்றிருக்கக் கூடியவர். திரையுலகில் பீக்கில் இருந்த போதே பெங்களூர்வை சேர்ந்த மென் பொறியாளரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர்.

நடிகை மீனா..

கண்ணழகி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மீனா பல படங்களில் கதாநாயகியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடியும் இருக்கிறார்.

அந்த வகையில் இவர் தளபதி விஜய் உடன் இணைந்து சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடலுக்கு நடனம் ஆகி தமிழகம் எங்கும் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தினார்.

பொற்காலம் திரைப்படத்தில் முரளியோடு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

ஊரடங்கு காலத்தில் தனது கணவருக்கு ஏற்பட்ட நோயால் கணவரை பறிகொடுத்த அவர் தற்போது தான் அந்த பாதிப்பில் இருந்து வெளியே வந்து விட்ட நிலையில் சமூக ஊடகங்களில் அடிக்கடி இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக விஷயங்கள் கசிந்து வருகிறது.

இதனை அடுத்து அது போன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் இவர் பதில் அளித்தும் பதிவுகளை போட்டும் இருக்கின்ற நிலையில் தற்போது நடிகை மீனாவிற்கும் எல் முருகனுக்கும் என்ன உறவு என்ற கேள்விகள் எழுந்துள்ளத

தாய் 8 அடி மகள் 16 அடி..

நடிகை மீனா எப்படி குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் ஜொலித்தாரோ அது போல இவரது மகள் நைனிகாவும் தெறி திரைப்படத்தில் தளபதி விஜய் இணைந்து நடித்திருந்தார்.

இந்த படத்தில் நைனிகாவின் நடிப்பானது தளபதி விஜய்யின் நடிப்பை ஓரம் கட்ட கூடிய வகையில் அனைவரையும் அசத்தக்கூடிய வகையில் இருந்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

மேலும் இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் நைனிகாவிற்கு தொடர்ந்து வந்த போதிலும் மீனா அவர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் தளபதிக்காக தான் அந்த படத்தில் நடித்தார் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

நடிகை மீனா எல் முருகன் உறவு என்ன?

அத்தோடு நடிகை மீனா தனது தோழியான கலா மாஸ்டரோடு இணைந்து பொங்கல் கொண்டாட்டங்களை அமைச்சர் எல் முருகனோடு டெல்லியில் கொண்டாடினார்.

இந்நிகழ்வு முடிந்தது எப்போது என்று உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.இதனை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு என்பது போல ஊடகங்களில் கிசுகிசுக்கள் வெளி வருவதை பற்றி பயில்வான் ரங்கநாதன் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

மேலும் தனது இரண்டாவது திருமணம் குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை மீனா வெளிப்படுத்தி இருப்பதை அடுத்து இது போன்ற தவறான பதிவுகளை பதிவிட்டு வரும் மக்களை என்னவென்று சொல்வது என்று தெரியாமல் சில வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்.

மேலும் அமைச்சரின் அழைப்பை ஏற்றுத்தான் அந்த விழாவில் பங்கேற்க இவரும் கலா மாஸ்டர் உடன் சென்று இருக்கலாம்.

இதில் உள்குத்து ஏதும் இல்லை என்பதை வெளிப்படையாக பேசிய பயில்வான் ரங்கநாதன் நடிகை மீனா மற்றும் எல் முருகனின் உறவு பற்றி எழுந்திருக்கும் சந்தேகங்களுக்கு பதிலடி தரக்கூடிய வகையில் பேசி விட்டார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அமைச்சர் என்ற பெயரில் தான் மரியாதை நிமித்தமாக அவர் அந்த விழாவில் பங்கேற்று இருக்கிறார்.

இதைத் தவிர இதில் வேறு ஏதும் இல்லை என்பதை ஓபன் ஆக உடைத்த விஷயத்தை நண்பர்களோடு பகிர்ந்து வருகிறார்கள்.