காத்து கூட உள்ளே போக முடியாது.. கணவருடன் படு நெருக்கமாக சீரியல் நடிகை சரண்யா துராடி..!

தமிழில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு சின்னத்திரை நாடகம் மூலமாக பிரபலமானவர் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ். சென்னையை சேர்ந்த சரண்யா துராடி தன்னுடைய கல்லூரி படிப்பை வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் படித்தார்.

அதற்கு பிறகு சின்ன திரையில் அவரது கவனத்தை செலுத்தினார். இந்த நிலையில் முதன்முதலாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த தொலைக்காட்சியில் நான்கு வருடங்கள் செய்தி நிருபராக பணியாற்றி வந்தார் சரண்யா துராடி.

செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு:

அந்த சமயத்தில் புதிய தலைமுறையில் நிறைய சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வந்தனர். மேலும் அவர்களை குறித்த செய்திகளை தொகுத்து வழங்கி வந்தனர். அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் சரண்யாதான் செய்து வந்தார்.

இந்த நிலையில் புதிய தலைமுறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது இவருக்கு இரண்டு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது மற்றும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி ஆகிய திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

செய்தி துறையில் இருந்த பொழுது இவ்வளவு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதை அறிந்த சரண்யா பிறகு நடிப்பின் மீதும் ஆர்வம் காட்ட துவங்கினார். இந்த நிலையில் புதிய தலைமுறையில் இருந்து விலகிய சரண்யா அதற்குப் பிறகு சில ஆண்டுகள் லண்டனில் குடி பெயர்ந்து வாழ்ந்து வந்தார்.

சின்னத்திரை வாய்ப்பு:

பிறகு இந்தியா திரும்பிய அவர் மீண்டும் நியூஸ் 18 தொலைக்காட்சியில் மூத்த செய்தி நிருபராக சேர்ந்தார். இந்த திரைப்பட வாய்ப்புகளுக்கு பிறகு சின்னத்திரையில் இவருக்கு அதிகமாக வாய்ப்பு கிடைத்தது. ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்கிற தெலுங்கு தொடரில் 2009 ஆம் ஆண்டு இவர் நடித்தார்.

சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் ஒளிபரப்பான அதே தொடரைதான் மீண்டும் தமிழிலும் மறு உருவாக்கம் செய்தனர். எனவே இரண்டிலுமே கதாநாயகியாக நடித்தார் சரண்யா துராடி.

தற்சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆயுத எழுத்து என்னும் தொடரிலும் நடித்து வருகிறார் இவர். இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கதாநாயகி போல புகைப்படங்களை வெளியிடுவதையும் இவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் அவரது கணவருடன் நெருக்கமாக அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.