இது தொடையா..? தேக்கு சிலையா..? வெளிநாட்டு வீதியில் ஃப்ரீ ஷோ காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்து தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு தனக்கான இடத்தை பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்சமயம் தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்து வருகிறார்.

ஆனால் ஆரம்பத்தில் சின்ன திரையில் வாய்ப்புகளை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். பொதுவாகவே பணக்கார குடும்பத்தில் இருக்கும் பெண்கள்தான் தமிழ் சினிமாவிற்கு நடிகைகளாக வருவார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் பிண்ணனி:

நடுத்தர வர்க்கத்திலிருந்து நடிகையாக ஆசைப்படும் பெண்களே வெகுசிலர்தான். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது குடும்பமே கஷ்டத்தில் இருந்த பொழுதும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அதில் வந்த வருவாய் மூலமாக தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்தார்.

முதன்முதலாக சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பெரிதாக இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை பிறகு கலைஞர் டிவியில் வெளியான மாநாட மயிலாட நிகழ்ச்சிதான் இவருக்கு ஓரளவு வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.

அந்த சமயத்தில் தமிழில் சின்ன சின்ன படங்களை இயக்கி வந்த இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் திரைப்படமான அட்டகத்தி திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

விஜய் சேதுபதி கொடுத்த வாய்ப்பு:

அதன் மூலமாக அவருக்கு நடிகர் விஜய் சேதுபதியிடம் வாய்ப்பு கிடைத்தது விஜய் சேதுபதி அவர் நடித்த ரம்மி மற்றும் பண்ணையாரும் பத்மினியும் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார்.

அந்த இரண்டு படமுமே நல்ல வரவேற்பை பெற்று தந்ததை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷிற்கு வரவேற்பு கிடைக்க தொடங்கியது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதனை தொடர்ந்து நயன்தாரா போலவே தற்சமயம் இவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார். இந்த நிலையில் முன்பெல்லாம் அதிகமாக கவர்ச்சி காட்டாத நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக அதிக கவர்ச்சி காட்டி வருகிறார். அப்படியாக தற்சமயம் வெளிநாடு சென்று அங்கு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.