அந்த இடத்தில் மீனா எப்படி வந்தார்.. கலா மாஸ்டரால் வந்த சிக்கல்.. விளாசும் பிரபலம்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை மீனா தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் பலரைப் பெற்றிருக்கிறார்.

நடிகை மீனா ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமாகி அதன் பின் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து எவர்கீரின் நடிகையாக இன்றும் இருக்கிறார்.

அந்த இடத்தில் மீனா எப்படி வந்தார்..

ஊரடங்கு காலத்தில் நடிகை மீனா தன் கணவரை இழந்த பிறகு அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்திகள் இணையத்தில் வேகமாக பரவி வந்தது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

எனினும் மீனா அது பற்றி முற்றுப்புள்ளி வைத்ததோடு மட்டுமல்லாமல் அவர் நடிக்கின்ற காலத்தில் இவரை பற்றிய அதிக கிசுகிசுக்கள் ஏதும் வராத நடிகையாக இருந்ததோடு திரையுலகில் இழுத்து போர்த்தி நடித்த நடிகைகளிலும் ஒருவராக இருக்கிறார்.

இதற்கு காரணம் நடிகை மீனா தனுஷை திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளி வந்த வதந்திகளை அடுத்து தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் என்ன அப்படி இவர் சிக்கி இருக்கும் சர்ச்சையில் இடம் பிடித்திருக்கும் பேசும் பொருள் எப்படிப்பட்டது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

கலா மாஸ்டரால் வந்த சிக்கல்..

பொங்கல் பண்டிகையின் போது மத்திய அமைச்சர் எல் முருகன் வீட்டிற்கு அரசியல் தலைவர்கள் சென்றிருந்தார்கள். அவர்களையும் தாண்டி சினிமா உலகைச் சார்ந்த மீனா மற்றும் அவருடைய உற்ற தோழி கலா மாஸ்டரும் சென்றார்கள்.

இந்த விஷயம் பொங்கல் முடிந்து பல மாதங்கள் ஆன பிறகு மீனா மற்றும் எல் முருகனுக்கு இடையே இருக்கின்ற உறவு குறித்து தவறாக வதந்திகள் கிளம்பிய வண்ணம் உள்ளது.

இந்த விசேஷத்திற்கு எப்படி மீனா சென்று இருப்பார் என்ற கேள்விகள் அடுக்கடுக்காக கிளம்பிய நிலையில் கலா மாஸ்டர் தான் இவரை உடன் அழைத்துச் சென்று இருப்பார். இதனால் தான் இந்த சிக்கல் வந்துள்ளது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

விளாசித் தள்ளும் பிரபலம்..

இது குறித்து சேகுவாரா அண்மை பேட்டி ஒன்றில் பேசிய போது அரசாங்க விழாவில் மீனாவிற்கு என்ன வேலை என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் கலா மாஸ்டரால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதை புட்டு புட்டு வைத்தார்.

இது குறித்து தொடர்ந்து செய்திகள் வெளி வந்த நிலையில் எல் முருகன் இதற்கான விளக்கத்தை தரவில்லை என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்.

மேலும் தற்போது கலா மாஸ்டர் பற்றி எந்த ஒரு பேச்சுக்களும் வெளி வரவில்லை.ஸஆனால் மீனா பற்றி தான் அதிக அளவு வருகிறது என்று சொல்லி இதற்கான விளக்கத்தை மீனா X – பதிவில் முட்டாள்கள் எப்போதும் தேவையில்லாத வதந்திகளை தான் பரப்புவார்கள் என்று காண்டாக பதிவிட்டு இருக்கிறார்.

இதனை எடுத்து பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ மீனாவுக்கு ஆதரவாக பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த பதிவில் அவர் இதற்கு தான் வருத்தப்பட வேண்டாம் மீனா என்று கமெண்ட் போட்டு இருந்தார்.