படுக்கைக்கு அழைத்த நடிகையின் தம்பி..! பவி டீச்சர் பிரிகிடா கொடுத்த பதிலை பாருங்க..!

பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். பாய்ஸ் திரைப்படம் பெரும் தோல்வியை கண்ட ஒரு திரைப்படம் என்றாலும் கூட அந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகருக்கும் பிறகு வேறு திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் வரவேற்புகள் கிடைத்தது.

அதேபோல நகுலும் பாய்ஸ் திரைப்படத்தில் பெரிதாக பிரபலமாகவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு தொடர்ந்து வாய்ப்புகளை பெற துவங்கினார். காதலில் விழுந்தேன் திரைப்படம் நகுலுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த முதல் திரைப்படம் என்பதால் அந்த திரைப்படத்திற்கு வெகுவான விளம்பரங்கள் இருந்தன. அந்த விளம்பரங்களே நகுலை அதிக அளவு மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தியது.

நகுலுக்கு வந்த வரவேற்பு:

தொடர்ந்து மாசிலாமணி கந்தகோட்டை மாதிரியான திரைப்படங்களில் நடித்தார் நகுல். காதலில் விழுந்தேன் மற்றும் மாசிலாமணி ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தது. அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் அவ்வளவாக வெற்றியை தரவில்லை.

இந்த நிலையில் அவரது நடிப்பில் 2018 ஆம் ஆண்டு செய் என்கிற திரைப்படம் வந்தது. அதற்கு பிறகு இப்போது வரை ஏதும் திரைப்படங்கள் வரவில்லை. தற்சமயம் கதாநாயகனாக வாஸ்கோடாகாமா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நகுல்.

இந்த திரைப்படத்தில் நகுல் படத்தின் கதாநாயகியாக நடித்த நடிகையை அட்ஜஸ்ட்மெண்டிற்கு அழைத்ததாக கூறி தற்சமயம் சர்ச்சைகள் சென்று கொண்டிருக்கின்றன. இதற்கு முன்பு நகுல் நடித்த எந்த ஒரு திரைப்படத்திலும் அவரைக் குறித்து கிசுகிசுக்கள் என்பது பெரிதாக வந்தது கிடையாது.

படத்தில் நடந்த விஷயம்:

இந்த நிலையில் தற்சமயம் அவரைக் குறித்து கிசுகிசு வந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் பணிபுரிந்த அசோசியேட் டைரக்டர் இது குறித்து ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது ரவி டீச்சர் என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரிகிடா தான் நடிக்க இருந்தார். ஆனால் அவர் வாய்ப்பைப் பெற்று நடிக்க வந்த போது அவரை நகுல் அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு அழைத்தார்.

அதற்கு ஒப்புக்கொள்ளாத பிரிகிடா அந்த படத்தில் இருந்து விலகினார் அதற்குப் பிறகு இப்பொழுது ஒரு மலையாள நடிகையை அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று அவர் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவரிடம் கேள்வி கேட்கும் தொகுப்பாளர் அட்ஜஸ்ட்மெண்ட்டால்தான் ஒரு நடிகை அந்த படத்தில் இருந்து போய்விட்டார் என்று கூறுகிறீர்கள். அப்படி என்றால் இப்போது வந்திருக்கும் நடிகை அதே மாதிரியான அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு ஒப்புக்கொண்டுதான் வந்திருக்கிறார் என்று அர்த்தமாகாதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த அசோசியேட் டைரக்டர் கூறும்பொழுதே இப்பொழுது இருக்கும் நடிகை எப்படி வாய்ப்பை பெற்றார் என்று நான் கூறவில்லை இதற்கு முன்பு நகுல் செய்த மன்மத லீலைகளைதான் நான் கூறுகிறேன் இன்னும் நிறைய விஷயங்களை நகுல் செய்திருக்கிறார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.