நயன்தாரா சைடு பிசினஸ் தெரியுமா..? அடிக்கடி துபாய் செல்வது ஏன்..? தீராத வி****ர வெறி..!

தமிழ் சினிமாவில் அதிக வருமானம் பெரும் நடிகைகளில் முக்கியமானவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த பொழுது மிகக் குறைந்த சம்பளத்திற்குதான் நயன்தாரா நடிப்பதற்கு வந்தார்.

ஆனால் மலையாளத்தை விடவும் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கான வருமானம் அதிகம் என்பது நயன்தாராவிற்கு அப்பொழுது தெரிந்திருந்தது அதனால்தான் மலையாளத்தில் வாய்ப்புகள் வந்த போதும் கூட மலையாளத்தில் நடிக்காமல் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார்.

தமிழில் ஐயா திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது தொடர்ந்து அவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் அவருக்கு வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அந்த இரண்டு திரைப்படங்களிலும் பாரம்பரிய உடைகளில் நடித்த நயன்தாரா கஜினி திரைப்படத்தில் நடிக்கும் போது அதிக கவர்ச்சியுடன் நடித்தார்.

நயன்தாராவிற்கு வந்த வரவேற்பு:

இதனால் அவருக்கு எந்த வகையான கதாபாத்திரமாக இருந்தாலும் ஒத்துப் போகும் என்கிற நிலை இருந்து வந்தது. தற்சமயம் தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இன்னும் சிலர் கூறும் பொழுது அன்னபூரணி படத்திற்கு 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார் நயன்தாரா என்று கூறுகின்றனர். நயன்தாராவின் சொத்து மதிப்பு 200 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய பெண் தொழிலதிபர்களின் நான்காவது இடத்தில் நயன்தாரா இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

படத்தில் மட்டுமே நடித்து நயன்தாராவிற்கு இவ்வளவு சொத்துக்கள் வர வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் இப்பொழுது சில காலங்களாகதான் நயன்தாரா அவருடைய சம்பளத்தை இவ்வளவு அதிகம் ஆக்கி இருக்கிறார். இதற்கு முன்பு குறைவான சம்பளம்தான் வாங்கி வந்தார் என்னும்போது எப்படி 200 கோடிக்கும் அதிகமாக இவரிடம் சொத்துக்கள் இருக்கின்றன என்பது பலர் கேள்வியாக இருந்தது.

சொந்த தொழில்கள்:

இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும்பொழுது நயன்தாராவின் மற்ற தொழில்கள் பற்றி அவர் கூறியிருக்கிறார். சினிமா துறைக்கு வந்தது முதலே நயன்தாரா அவருக்கு வரும் வருமானத்தை வேறு வேறு தொழில்களில் முதலீடு செய்து வந்தார். சின்ன சின்ன டீக்கடைகள் பெட்ரோல் பங்கில் துவங்கி பெரிய பெரிய பிசினஸ்களில் வரை நயன்தாரா முதலீடு செய்திருக்கிறார்.

துபாயில் கூட அவர் பிசினஸ் செய்து வருகிறார். ஆனால் நயன்தாரா முதலீடு செய்தார் என்று மக்களுக்கு தெரியும் தொழில்கள் மிக குறைவுதான் முக்கியமாக தற்சமயம் அழகு சாதன பொருட்களை நயன்தாரா விற்பனை செய்து வருகிறார். அது ஒன்றுதான் பலரும் அறிந்த நயன்தாராவின் தொழிலாக இருந்து வருகிறது. அது இல்லாமல் நயன்தாரா நிறைய சின்ன பிசினஸ்களில் முதலீடு செய்திருக்கிறார் என்று கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.

மேலும் நயன்தாரா தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதில் அதிக முக்கியத்துவம் காட்டக் கூடியவர் அதனால்தான் அவரது திருமண வீடியோவை கூட ஒரு தனியார் நிறுவனத்திற்கு அதிக விலைக்கு விற்று இருக்கிறார் என்றும் கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்