முருகன் வீட்டுக்கு மீனா வந்தது எப்படி தெரியுமா..? யாருக்கும் தெரியாமல் மீனா செய்த லீலைகள்..! போட்டு உடைக்கும் பிரபலம்..!

சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகையாக மீனா இருந்து வருகிறார். நடிகை மீனா தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காலகட்டத்திலேயே பெரிதாக சர்ச்சைக்கு உள்ளாகாத நடிகை என்று பல சினிமா விமர்சனங்களே கூறியிருக்கின்றனர்.

பாஜகவின் முக்கிய பிரமுகரான எல். முருகனுக்கும் மீனாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. அந்த சர்ச்சை இப்போது வரை பெரிதாக வெடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் சேகுவாரா கூறும்பொழுது மீனாவின் வாழ்க்கை பக்கங்களில் இருந்து நிறைய விஷயங்களை பேசி இருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது மீனா தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை என்றெல்லாம் கூற முடியாது. தமிழ் சினிமாவில் கண்ணீர் விட்டு அழ கூடிய நடிகைகளை தான் சிறப்பான நடிப்பை கொண்ட நடிகர்கள் என்று சொல்லலாம். அந்த வகையில் ராதிகா, குஷ்பூ மாதிரியான நடிகைகளை கூறலாம்.

மீனாவின் நடிப்பு:

மீனாவிற்கு அப்படி எல்லாம் நடிக்க வராது. அதேபோல மீனாவின் அம்மாவும் சித்தியும் மலையாளத்தில் கவர்ச்சி நடிகைகளாக இருந்தவர்கள்தான் அதேபோல மீனாவும் சினிமாவிற்கு கவர்ச்சி நடிகையாக தான் வந்தார். அவர் ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடித்திருக்கலாம்.

ஆனால் தொடர்ந்து கவர்ச்சியாகதான் எல்லா திரைப்படங்களிலும் நடித்து வந்தார். ஔவை சண்முகி திரைப்படத்தில் கூட அவர் ஒரு பாடலில் எவ்வளவு கவர்ச்சியாக நடித்திருந்தார் என்று பார்க்கலாம். அந்த பாடலை படமாக்குவதற்காக கே.எஸ் ரவிக்குமாரும் கமல்ஹாசனும் மீனாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.

அவரை எதற்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றார்கள் என்பது கமலுக்கும், கே.எஸ் ரவிக்குமாருக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். எனவே மீனா ஒரு விருது வாங்கிய சிறப்பான நடிகை என்றெல்லாம் நம் கூற முடியாது.

தற்போதைய பிரச்சனை:

இந்த நிலையில்  இப்போது இருக்கும் பிரச்சனையை பொருத்தவரை அதில் கேட்கப்படும் கேள்விகள் நியாயமானதாகதான் இருக்கிறது. ஏனெனில் மீனாவை பொருத்தவரை அவருக்கென்று எந்த ஒரு அரசியல் பின்புலமும் கிடையாது.

பா.ஜா.கவிற்கு ஆதரவாக அவர் எதுவும் பேசியது கிடையாது. அரசியலில் அவர் ஈடுபாடு காட்டியதே கிடையாது. அப்படி இருக்கும்பொழுது பிரதமர் மோடி கலந்துகொள்ளும் ஒரு நிகழ்வில் மீனா எதற்காக கலந்து கொள்ள வேண்டும்.

மீனாவிற்கும் அந்த நிகழ்வுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு கிடையாது என்னும் பொழுது எதற்காக எல் முருகன் மீனாவை அங்கு அழைக்க வேண்டும். இது ஒரு சரியான கேள்வியாக தான் இருக்கிறது மேலும் மீனாவை கலா மாஸ்டர்தான் அங்கு அழைத்து சென்றார் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.

ஆனால் இப்பொழுது வரை கலா மாஸ்டர் இதற்கு எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. எனவே மீனா எல் முருகன் பொங்கல் நிகழ்ச்சிக்கு சென்றது என்பது ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் தான் என்று ஆணித்தனமாக கூறுகிறார் பத்திரிகையாளர் சேகுவாரா