விவாகரத்து.. குழந்தையால் ஏமாற்றம்.. சக்காளத்தியான தோழி.. பறிபோன வாழ்க்கை.. மஞ்சு வாரியர் ரகசிய பக்கம்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மஞ்சு வாரியர் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தமிழ்நாட்டில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாகர்கோயிலில் பிறந்தவர்.

மலையாள திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படக்கூடிய இவர் சாட்சியம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததை அடுத்து மலையாள திரை உலகில் பிரபலமானார்.

விவாகரத்து.. குழந்தையால் ஏமாற்றம்..

தற்போது மலையாளம் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்து வரக்கூடிய இவர் சல்லாபம் படத்தை அடுத்து ஈ புழையும் கடந்து, தூவல், கொட்டாரம், களியாட்டம், கிருஷ்ணகுடியில் ஒரு பிரணய காலத்து போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில்தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர்.

இவர் இந்திய தேசிய திரைப்பட சிறப்பு விருது, சிறந்த நடிகைக்கான கேரளா அரசின் விருதையும், ஃபிலிம் பேர் விருதையும் பெற்றவர். மேலும் இவர் மலையாள நடிகரான திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவருக்கு மகள் ஒருவர் இருக்கிறார்.

மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகர்களான மோகன்லால் மம்முட்டி போன்றவர்களோடு இணைந்து நடித்திருக்க கூடிய இவர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இதனை அடுத்து இவர் நடிகர் திலீபை 2015 விவாகரத்து செய்து விடுகிறார்.

சக்காளத்தியான தோழி.. பறிபோன வாழ்க்கை..

இவர் தனது காதல் கணவரை பிரிய காரணம் இவருடைய நெருங்கிய தோழியான காவ்யா மாதவன் மற்றும் பாவனா என்ற விஷயம் தற்போது வெளியே தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து பாவனாவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம். திலீப் மற்றும் காவியா மாதவன் இடையே இருந்த ரகசிய காதலை கண்டு பிடித்து போட்டுக் கொடுத்ததே பாவனா தான். எனவே தான் தீலிப் பாவனாவை கிட்நாப் செய்து சீரழித்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இதனை அடுத்து தனது கணவனின் காதல் வேலை தெரிந்ததை அடுத்து கணவரை விட்டு பிரிய முடிவு செய்து விவாகரத்து பெற்ற சமயத்தில் தனது மகள் மீனாட்சி அப்பா உடன் தான் இருப்பேன் என அடம் பிடித்து இருக்கிறார்.

இப்படித்தான் மஞ்சு வாரியர் வாழ்க்கையில் விளையாடிய தோழி சக்காளத்தி ஆக மாறி விவாகரத்து பெற காரணமானதோடு மட்டுமல்லாமல் தான் பெற்ற குழந்தை தன்னோடு வர மறுத்ததை அடுத்து ஏமாற்றமும் அடைந்தார்.

மஞ்சு வாரியர் ரகசிய பக்கம்..

அதுமட்டுமல்லாமல் விவாகரத்து பெறுவதற்கு முன்பே திடீர் தனக்கு அந்த சொத்து வேண்டும் எந்த சொத்து வேண்டும் என்று பல நெருக்கடிகளை தீலிப் இவருக்கு கொடுத்து இருக்கிறார்.

இதையெல்லாம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய மஞ்சு வாரியர் கடைசியாக கணவரை விவாகரத்து செய்வதில் உறுதியாகி விவாகரத்து செய்தார்.

இதனால் வாழ்க்கையே வெறுத்துப் போக மன அழுத்தத்தால் உடல் எடை கூடிய இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய சமயத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவின் மை லைஃப் என்ற புத்தகத்தை படித்திருக்கிறார்.

இந்த புத்தகத்தை படித்ததை அடுத்து இவருக்குள் ஏற்பட்ட தெளிவு அடுத்த கட்டத்திற்கு இவரை அழைத்துச் செல்ல உதவியது என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் துயரிலிருந்து மீண்டு வந்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து தனது செகண்ட் இன்னிங்ஸில் களைகட்டி வருகிறார் என்ற விஷயம் தற்போது இணையங்களில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.