அனாதை குழந்தைகளை இவர் விற்பனை செய்கிறார்.. பூகம்பத்தை கிளப்பிய பாடகி சுசித்ரா..!

பாடகி சுசித்ரா ஆரம்ப காலத்தில் ஒரு மிகச்சிறந்த ரேடியோ ஜாக்கியாக திகழ்ந்தவர். இவர் தமிழகத்தைச் சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளர் ஆவார். இதனை அடுத்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ரேடியோ மிர்ச்சி மூலம் தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்த இவர் ரேடியோ சென்னை பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி இருக்கிறார். இவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தனக்கு போதை வஸ்துவை கொடுத்து வன்புணர்ந்ததாக பகிரங்க குற்றச்சாட்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

பாடகி சுசித்ரா..

இதனை அடுத்து இவரது ட்விட்டர் பக்கத்தில் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளி வந்த திரையுலகப் பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கைகளை அம்பலப்படுத்தி மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இவரது முன்னாள் கணவர் கார்த்திக் பேசும்போது சுசித்ரா மன அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பாடகி சின்மயி, தனுஷ் மற்றும் அனிருத் உடன் இருப்பது போன்ற நிழல் படங்களை வெளியிட்டு அதிர்வுகளை ஏற்படுத்தினார்.

மேலும் 2016-ஆம் ஆண்டு லீக்கான இந்த விஷயங்கள் திரையுலக பிரபலங்களின் முகத்திரையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இதில் மாட்டிய முக்கிய பிரபலங்கள் தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா என பலர் மீதும் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் இன்று வரை இது குறித்து எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை என்பதை யோசிக்க வைத்துள்ளது.

அனாதை குழந்தைகளை விற்பனை செய்வார்..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் சுசித்ரா தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் தன் பாலின ஈர்பாளர் என்று தெரிவித்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இதனை அடுத்து தற்போது மீண்டும் பேட்டி ஒன்றில் பேசிய பாடகி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் இவர் பகிர்ந்து இருக்கும் விஷயம் மீண்டும் கடுமையான அதிர்வலைகளை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என சொல்லலாம்.

இதற்குக் காரணம் அவர் தனது முன்னாள் கணவர் கார்த்திக் பற்றி கூறும் போது அவருடைய அம்மா ஒரு வேஸ்ட் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டார் என்ற விஷயத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் அவர் அனாதை குழந்தைகளை விற்கக்கூடிய நபர். அப்படி விற்கும் பணத்தில் கிடைத்த தொகையை அரசுக்கும் கொடுப்பார். அதனால் அரசு அவரை கைது செய்ய மாட்டார்கள் என்று சொன்ன விஷயம் தான் தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது.

பூகம்பத்தை கிளப்பிய பாடகி..

இப்படி ஒரு பூகம்பத்தை பாடகி சுசித்ரா யாரும் எதிர்பார்க்காத நிலையில் கிளப்பி இருப்பதை அடுத்து இந்த விஷயம் தமிழகம் எங்கும் பேசும் பொருளாகி விட்டதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி இவர் இது போன்ற விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இதில் எது உண்மை என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இதை அடுத்து இந்த விஷயத்தை பற்றி விஷயம் தெரியாத நண்பர்களுக்கு இணையதள வாசிகள் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் சில சமூக நலன் விரும்பிகள் பாடகி சுசித்ரா குறித்து உண்மை நிலை என்ன என்பதை அறிந்து அதற்கு தக்கவாறு நடவடிக்கை எடுத்தல் அவசியம் என்பதை வலியுறுத்தி வருகிறார்கள்.