நான் விபச்சாரியா..? அழுத சினேகாவிடம் ஒல்லி நடிகர் சொன்ன வார்த்தை..!

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் வரிகளின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட புன்னகை அரசி சினேகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரத்தை பிடித்து வைத்திருப்பவர். அது மட்டும் அல்லாமல் இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்வார்.

நான் விபச்சாரியா..

நடிகை சினேகா தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்ததை அடுத்து 2012-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நடித்து வந்த நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை சினேகா பற்றி அதிக அளவு கிசுகிசுக்கள் வராத நிலையில் தற்போது செய்யாறு பாலு சினேகாவின் சினிமா பயணம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் மணிரத்தினம் உதவி இயக்குனராக பணி புரிந்த சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் என்ற படத்தில் நடிக்க ஹீரோவாக சாக்லேட் பாயாக திகழ்ந்த பிரசாந்த் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்.

மேலும் அந்த படத்தில் புதுமுக ஹீரோயினி அமைந்தால் படம் நன்றாக வரும் என்ற நினைப்பில் வார பத்திரிக்கையில் இந்த படத்துக்கு ஹீரோயினி தேவை என்ற விளம்பரம் கொடுக்கப்பட்டது.

இதை அடுத்து சினேகா அந்த பத்திரிக்கைக்கு தன்னுடைய புகைப்படத்தை அனுப்பியதை அடுத்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் என்ற விஷயத்தை பகிர்ந்தார்.

அழுக சினேகாவிடம்..

அது மட்டுமல்லாமல் படம் வெளி வந்த பிறகு சினேகாவிற்கு நல்ல பெயர் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் குறுகிய காலத்திலேயே திரை உலகில் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார்.

சினிமாவை பொறுத்த வரை ஒரு நபர் எந்த அளவு பிரபலமாக மாறுகிறாரோ அந்த அளவு அவர்களை சுற்றி அதிக அளவு கிசுகிசுக்கள் கிளம்பும். அது போல நடிகை சினேகா நடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அந்த காலகட்டத்தில் கிசுகிசுக்கள் வெகுவாக பரவியது என்ற அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் புதுப்பேட்டை படத்தில் ஒரு விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய அவர் அந்த படத்தில் நடிக்க ஏன் ஒத்துக் கொண்டேன் என்று அழுத போது தனுஷ் அவருக்கு ஆறுதல் கூறிய விஷயமும் வெளி வந்துள்ளது.

ஒல்லி நடிகர் சொன்ன வார்த்தை..

அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சினேகாவிடம் அந்த ஒல்லி நடிகர் சினேகாவிடம் ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் இந்த கதாபாத்திரம் அவருக்கு மிக நல்ல பெயரை பெற்று தரும் என்று சொன்னதை அடுத்து அவருக்கு அந்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

இது போன்ற பல விஷயங்களை பகிர்ந்த செய்யாறு பாலு சினேகாவின் திரையுலக பயணத்தில் நடந்த விஷயங்களை சுவாரஸ்யமாக சொன்னதை அடுத்து ரசிகர்கள் எப்படியெல்லாம் நடந்து உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் தான் கண் கலங்கி அழுத சமயத்தில் ஒல்லி நடிகரான தனுஷ் அவரைத் தேற்றி பக்குவமாக படம் வெற்றி தரும் அத்துடன் சினேகாவிற்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று சொன்ன வார்த்தைகளை அவர்கள் நண்பர்களுக்கும் சொல்லி ஷேர் செய்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.