இதுக்கு தான் மும்பை போனீங்களா..? வெறும் ப்ரா.. விருது விழாவில் ஜோதிகா.. விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஜோதிகா. ஆரம்பத்தில் வாலி திரைப்படம் மூலமாகதான் சினிமாவிற்கு அறிமுகமானார் ஜோதிகா. அறிமுகமான உடனே அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிறகு சூர்யாவை திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா.

மும்பையை சேர்ந்த ஜோதிகா தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடிதான் வந்தார். பிறகு இங்கே செட்டில் ஆகிவிட்டார் இந்த நிலையில் கொரோனாவிற்கு பிறகு ஜோதிகா மும்பைக்கு சென்று அங்கே வீடு வாங்கினார். பிறகு சூர்யா மற்றும் தனது குழந்தைகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மும்பைக்கு சென்று விட்டார்.

மும்பை சென்ற ஜோதிகா:

இது அதிக சர்ச்சையாகி வந்தது. சிவக்குமார் குடும்பம் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்களிடம் இருந்து சூர்யாவை பிரித்து தனியாக அழைத்து சென்றுவிட்டார் ஜோதிகா. ஏனெனில் ஜோதிகாவின் அம்மாவும் அப்பாவும் மும்பையில்தான் இருக்கின்றனர் என்று பேசி வந்தனர். இதுக்குறித்து ஜோதிகா ஒரு பேட்டியில் கூறும் பொழுது கொரோனா சமயத்தில் எனது அம்மா அப்பாவை நேரில் சென்று பார்ப்பது எனக்கு சிரமமாகிவிட்டது.

அதனால்தான் மும்பையில் ஒரு வீடு வாங்கினேன். மேலும் எனது குழந்தைகளை தமிழ்நாட்டில் பிரபலங்களின் குழந்தைகளாகவே அணுகுகின்றனர். மும்பையில் அவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் கிடைக்கும் என்று நினைத்தேன் என்று ஜோதிகா கூறியிருந்தார்.

மேலும் ஜோதிகா மும்பைக்கு சென்றது முதல் பாலிவுட் சினிமாக்களின் மீது கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இவரது நடிப்பில் பாலிவுட்டில் ஓரிரு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் வெளியான ஸ்ரீகாந்த் என்னும் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருந்தார்.

விருது வழங்கும் விழாவில் சர்ச்சை:

மேலும் சூர்யாவிற்கும் பாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் ஹாலிவுட்டில் கொஞ்சம் வரவேற்பு பெற்றதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து வாய்ப்புகள் அங்கு கிடைக்கிறது என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த ஃபிலிம் சார் விருது வழங்கும் விழாவிற்கு விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டார் ஜோதிகா. அந்த விழாவில் அவர் கலந்து கொள்ளும் பொழுது அதிக கவர்ச்சியுடன் கூடிய ஆடையை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

கருப்பு பிளேசர் போட்டுக்கொண்டு அப்பட்டமாக முன்னழகு தெரியும் படி அவர் மீடியாக்களுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார். இதற்கு முன்பு வரை விருது வழங்கும் விழா அனைத்திற்குமே புடவை கட்டிக் கொண்டு வந்த ஜோதிகா மும்பை சென்றதும் இப்படி மாறிவிட்டாரே இதற்காகதான் பாலிவுட்டிற்கு சென்றாரா? என்று இது குறித்து ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே பாலிவுட் பிரபலங்கள் அனைவருமே பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சியான உடையை அணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.