என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டார்.. நாஞ்சில் விஜயன் மனைவி வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

இப்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி இருக்கின்ற விஷயம் என்ன என்றால் என்னை ஏமாற்றி தான் கல்யாணம் செய்து கொண்டார் என தனது கணவரான நாஞ்சில் விஜயன் மீது அவருடைய அன்பு மனைவி மரியா ஒரு பேட்டியில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதனை அடுத்து என்ன அண்ணே இப்படி எல்லாம் நீங்க பண்ணலாமா? என்ற ரீதியில் பலரும் பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பி வருவதோடு இப்படி ஏன் அவரது மனைவி சொன்னார் என்ற கேள்விக்கணைகளையும் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு..

விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகளில் தனது அற்புத நகைச்சுவை திறனால் அனைவரையும் சிரிக்க வைத்தவர். இவர் பெரும்பாலும் பெண் வேடம் போட்டு அனைவரையும் அசத்தக்கூடிய வகையில் நடித்துக் கவர்ந்து விடுவார்.

இவரும் லாக்டவுன் காலத்தில் youtube சேனலை ஆரம்பித்து அந்த சேனலுக்காக சூர்யா தேவியை பேட்டி எடுத்த சமயத்தில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் திருமணம் குறித்து வேண்டாதவற்றை பேசி இருந்தார். இதைத் தொடர்ந்து வனிதா விஜயகுமாரும் சூர்யா தேவியும் நாஞ்சில் விஜயன் மீது வழக்கு தொடர்ந்தார்கள்.

இதற்கு காரணம் youtuber சூர்யா தேவியை ஒரு கஞ்சா வியாபாரி என்று அவர் சித்தரித்ததோடு மட்டுமல்லாமல் தகாத வார்த்தையால் பேசியதால் அவதூறு வழக்கில் தன்னை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரில் 2022 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.

நாஞ்சில் விஜயன் மனைவி..

அதுமட்டுமா? அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் கூட பிரபல நடிகையோடு சேர்ந்து கொண்டு 1500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை 7000-க்கும், அதற்கும் அதிக தொகைக்கு விற்பனை செய்ததாக புகார்கள் வந்தது.

இந்நிலையில் இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் இவர் கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் மரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

 

மேலும் நாஞ்சில் விஜயனும், மரியாவும் ஒரு youtube சேனலுக்கு பேட்டி அளித்ததில் மரியா தன் கணவர் தன்னை ஏமாற்றி தான் திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணம் செய்த போது அவரது வயதை என்னிடம் சொல்லவில்லை.

அத்தோடு அப்போதே அங்கிள் வயசு இருக்கலாம். என்னை பெண் பார்க்க வந்த சமயத்தில் கூட தலை மீசை எல்லாம் வெள்ளையாகவே இருந்தது.

வெளியிட்ட பரபரப்பு தகவல்..

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் இவருக்கு எண்ணெய் தேய்த்த போது தான் சாயம் வெளுத்து போய் தலை முழுவதும் வெள்ளை முடி தான் என்று தன் கணவர் குறித்து நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து நாஞ்சில் நான் மரியாவை ஏமாற்றவில்லை என்னோட வயசையும் மறைக்கவில்லை. வெள்ளை முடிக்கு மட்டும் தான் டை அடித்தேன் என்று ரசனையோடு கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படுவதோடு ட்ரெண்டிங் ஆன ஒன்றாக மாறி உள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அட இதுதான் விஷயமா என்று சிரித்தபடி கலாய்த்து விட்டார்கள்.