விஜய் வீட்டில் குடிபுகுந்த நடிகை திரிஷா..! மனைவி சங்கீதா எடுத்த அதிரடி முடிவு..! பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது “கோட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் .

இதனிடையே அரசியலில் இறங்கி முழு வீச்சில் மும்முரம் காட்டி வருகிறார். இப்படியான நேரத்தில் நடிகர் விஜய் தொடர்ந்து நடிகை திரிஷாவுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

விஜய் – த்ரிஷா ரகசிய உறவு?

லியோ திரைப்படத்தில் நடித்த போது அந்த திரைப்படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்தது பெரும் சர்ச்சைக்குரிய விமர்சனமாக பார்க்கப்பட்டது .

இவர்கள் இருவரும் தகாத உறவில் பழகிக் கொள்வதாகவும் அதனால் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யுடன் சண்டையிட்டு தன் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டார் என்றும் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் விஜய் வீட்டில் குடி புகுந்த திரிஷாவால் அவரின் மனைவி சங்கீதா எடுத்த அதிரடி முடிவு என கூறி பயில்வான் பெரும் சர்ச்சை கிளப்பும் வகையில் ஒரு விஷயத்தை பேசி இருக்கிறார் .

மேலும் அவர் கூறியதாவது, திரிஷா ஏற்கனவே விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் இருவரும் மிகவும் பிட்டாக இருந்தார்கள் .

அப்படி ஒருமுறை ஒரு படத்தில் நயன்தாராவை விஜய் ஜோடியாக போட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டதும் திரிஷா கொந்தளித்து விட்டார்.

விஜய்யுடன் திரிஷா உல்லாசம்?

ஆனால், விஜய்யுடன் யார் நடிக்க வேண்டும்? என்பதை முடிவு செய்வது சங்கீதா தான். அதன் பிறகு தான் விஜய் சுயமாக தன்னுடைய கதாநாயகிகளை தேர்வு செய்ய ஆரம்பித்தார்.

அப்படித்தான் திரிஷாவும் விஜய்யும் ஓவர் கோட் போட்டுகிட்டு தோல் மேல் கை போட்டபடி எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இந்த சமயத்தில் விஜய்யும் த்ரிஷாவும் உல்லாசமாக டூர் சென்று லூட்டி அடித்து வருகிறார்கள் என பத்திரிகைகளில் செய்தி வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

அதன் பின்னர் இல்லை… இது படப்பிடிப்பின் இடைவெளியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் என்று கூறினார்கள்.

கோட் படத்தில் ஐட்டம் டான்ஸ் போட்ட திரிஷா:

தற்போது சமீபத்தில் கோட் திரைப்படத்தில் விஜய் கேட்டுக் கொண்டதற்கு இணங்க த்ரிஷா ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.

இதுவரை திரிஷா எந்த ஒரு படத்திலும் தனியாக குத்தாட்ட போட்டதே கிடையாது. முதன்முறையாக விஜய் கேட்டுக் கொண்டதற்காக குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.

இப்போது பிரச்சனை என்னவென்று கேட்டீர்களானால்… த்ரிஷா விஜய் பங்களாவிற்கு அடியிலேயே ரூ.20 கோடிக்கு ஒரு தனி பங்களாவை வாங்கி இருக்கிறார்.

விஜய் தங்கி இருக்கும் பங்களாவுக்கு அருகிலேயே வீடு வாங்கிய திரிஷா அவ்வப்போது விஜய்யை சந்தித்து பேசுவதையும், பழகுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

இதை அறிந்த விஜய்யின் மனைவியான சங்கீதா அவருடன் கடுமையாக சண்டையிட பிரச்சனை பெரிதாகியதால் விஜய்யை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு பறந்து விட்டார் என கூறுகின்றனர்.

அவங்க மட்டுமா வாங்கி இருக்காங்க இவங்களோட சேர்ந்து கீர்த்தி சுரேஷும் அந்த பங்களாவில் வீடு வாங்கியிருக்கிறார்.

விஜய் வீட்டில் புகுந்த த்ரிஷா:

கடல் காற்றுடன் கூடிய இயற்கை சூழ்ந்த அந்த பங்களாவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம் என்று தான் நடிகர் நடிகைகள் சென்று அந்த இடத்தில் வீட்டை வாங்குகிறார்கள் .

ஆனால், இங்கு இருப்பவர்களோ அதை வேறு விதமான நோக்கத்தில் பத்திரிகைகளில் தவறான செய்திகளை எழுதி உருட்டி விடுகிறார்கள்.

எனவே விஜய் அந்த மாதிரி ஆள் இல்லை. அவரது நோக்கம் 2026 இல் சட்டமன்ற தேர்தலில் தான் இருக்கிறது.

இந்த சமயத்தில் அவர் இதுபோன்று குண்டக்க மண்டக்க நடந்து கொண்டால் எப்படி அவர் அரசியலில் ஜெயிக்க முடியும்?

இது எல்லாம் அவருக்கும் தெரியும். அதை புரிந்து கொண்டுதான் நடந்து கொள்ளார். எனவே வெளியாகும் அத்தனை செய்திகளும் வதந்தி என பயில்வான் கூறியுள்ளார்.