இதனால் தான் என் முதல் பொண்டாட்டிக்கு நான் எந்த உதவியும் பண்ணல.. கமல்ஹாசன் ஓப்பன் டாக்..!

இளமை இதோ இதோ என்ற பாடலின் மூலம் டிஸ்கோ டான்ஸ் ஆடி ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட உலகநாயகன் கமலஹாசன் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

ஆண்டவரே என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய உலகநாயகன் கமலஹாசன் வேட்டைய ஆரம்பிக்கலாமா? என்ற வார்த்தைகளோடு தெறிக்கவிட்டு பிக் பாஸ் சீசனில் தொகுப்பாளராக களம் இறங்கி கலைகட்டி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்து வைத்திருப்பவர்.

உலக நாயகன் கமலஹாசன்..

கமலைப் பொறுத்த வரை திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வளர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கும் இவரைத் திரை உலகின் எண் சைக்ளோபீடியா என்று அழைத்தாலும் தவறில்லை.

திரைப்படங்களில் தனது அசாத்திய திறமையை நிரூபித்து அடுக்கடுக்கான வெற்றிகளை பெற்றிருக்கும் நடிகர் கமலஹாசன் தனது சொந்த வாழ்வில் நிலையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் தடுமாறியவர் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

அது மட்டுமல்லாமல் நடிகை ஸ்ரீவித்யாவை காதலித்ததை அடுத்து பெண் கேட்க சென்று அவரது அம்மா ஸ்ரீவித்யாவை மணம் முடித்துக் கொடுக்க மறுத்ததை அடுத்து ஒரு வேகத்தில் வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அப்படி காதலித்து திருமணம் செய்து கொண்ட வாணி கணபதியோடு பத்து ஆண்டு சேர்ந்து வாழ்ந்த நிலையில் குழந்தைகள் ஏதும் இல்லாத சமயத்தில் 1988-ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இதனால தான் பொண்டாட்டிக்கு எந்த உதவியும் பண்ணல..

இதனை அடுத்து தான் நடிகை சரிதாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கமலஹாசனுக்கு சுருதிஹாசன், அக்ஷராகசன் என்ற இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில் இருவருமே திரையுலகில் மிகச்சிறந்த நடிகர்களாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் 16 ஆண்டுகள் தொடர்ந்து சரிதாவோடு வாழ்ந்து வந்த இவர் மனகசப்பு ஏற்பட்டதை அடுத்து 2004 ஆம் ஆண்டு இவரிடமும் விவாகரத்து பெற்று திரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதை அடுத்து நடிகை கௌதமியோடு இணைந்து திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்ததை அடுத்து அண்மையில் தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கௌதமி கமலை விட்டு பிரிந்த விஷயங்கள் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இந்நிலையில் சரிகாவுடன் 16 ஆண்டு காலம் குடித்தனம் நடத்திய கமல் 2004-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்ததை அடுத்து தன்னுடைய நாட்கள் எப்படி இருந்தது என்று சரிகா கூறிய பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த பேட்டியில் நடிகர் கமலை பிரிந்தது நல்ல முடிவாக கருதுவதாக சொல்லியிருக்கும் நடிகை சரிகா என் அம்மாவுக்கு எது நல்லது என்று நினைத்தானோ அதைத்தான் செய்தேன் என்று கூறி இருக்கிறார்.

கமலஹாசன் ஓப்பன் டாக்..

மேலும் இந்த முடிவை எடுப்பதற்கு பல நாள் யோசித்ததாக சொல்லி இருக்கும் கமலை விட்டு வெளியே வந்த போது தன்னிடம் ஒரு கார் மற்றும் 60 ரூபாய் மட்டும் தான் இருந்தது. இதைக் கொண்டு எனது நண்பர் வீட்டுக்கு சென்றேன்.

அவர்கள் வீட்டில் குளித்துவிட்டு இரவில் நான் என் காலிலேயே தூங்கினேன் என்று சரிகா கூறினார்.மேலும் விவாகரத்துக்கு பின் சரிகா இருந்த சூழ்நிலையில் கமல் ஏன் உதவி செய்யவில்லை என்று கமலிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் யாரிடமும் அனுதாபத்தை தேடவில்லை என்று சொல்லி இருப்பார்.

அப்படி நான் உதவி செய்திருந்தால் அதற்காக அவர் வருத்தப்பட்டு இருப்பார் என்று கமல் கூறிய பேச்சாளர் தற்போது இணையத்தில் வைவலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.