தளபதி படத்தை ரிஜெக்ட் செய்த ஐஸ்வர்யா ராய்..! அதுக்கு சொன்ன காரணத்தை கேட்டீங்களா..?

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் ஹிந்தி படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்து அசத்தியவர்.

திரை உலகில் ஏராளமான ரசிகர்களை பெற்று இருக்கக்கூடிய நடிகை ஐஸ்வர்யா ராய் அண்மையில் மணிரத்தினம் இயக்கிய வரலாற்றுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராய்..

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார் என்ற விஷயமானது தற்போது இணையம் எங்கும் வேகமாக பரவி வருகிறது.

அப்படி அவர் விஜய் படத்தில் நடிக்க ஏன் மறுத்தார்? அதற்கு என்ன காரணம் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படிக்க தெரிந்து கொள்ளலாம். தளபதி விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த கோட திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. இந்நிலையில் தளபதி விஜய்யோடு இணைந்து நடிக்க பல நடிகைகள் போட்டோ போட்டி போட்டு வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

பல பாலிவுட் நடிகைகள் அவர் படத்தில் அறிமுகமாகி என்று டாப் இடத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் குறிப்பாக ராஷ்மிகா மந்தானா, மாளவிகா மோகனன், மீனாட்சி சவுத்ரி போன்ற நடிகைகள் விஜயோடு இணைந்து நடித்த பின்பு தான் நல்ல மார்க்கெட்டை பெற்றார்கள்.

தளபதி படத்தை ரிஜெக்ட் செய்த கதை..

அப்படி இருக்கும் போது ஐஸ்வர்யா ராய் மட்டும் ஏன் விஜயோடு இணைந்து நடிக்கவில்லை. அவருக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லையா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் விஜயோடு இணைந்து நடிக்க கூடிய அற்புதமான வாய்ப்பு உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது.

மேலும் தளபதி விஜய்யும் உலக அழகியோடு இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். எனினும் தளபதி படத்தை ஐஸ்வர்யா ராய் வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்து இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என தெரிந்து கொள்ளலாமா.

தளபதி விஜய் ஐஸ்வர்யா ராயோடு இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதை அடுத்து தமிழன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. அப்போது தான் அவர் விஜயோடு நடிக்க மறுத்துவிட்டார்.

சொன்ன காரணம் என்ன தெரியுமா?..

இதற்கு அவர் சொன்ன காரணம் என்னவென்றால் விஜயோடு இணைந்து நடித்தால் தன்னைவிட சின்னப் பையன் போல விஜய் ஸ்கிரீனில் தெரிவார் என்ற காரணத்தை காட்டித்தான் உலக அழகி ஐஸ்வர்யா ராய் விஜயோடு இணைந்து நடிக்கவில்லையாம்.

இதை அடுத்துதான் உலக அழகி பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ராவை பேசி தமிழன் படத்தில் நடிக்க வைத்ததாக சொல்லி இருக்கிறார்கள் இந்த விஷயத்தை கேள்வி பட்ட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள்.

மேடம் தளபதி பார்ப்பதற்கு சின்ன பையன் போல் தெரிவார் என்று கூறியது உண்மைதான் என்று அனைவரும் ஐஸ்வர்யா ராய் சொன்ன விஷயத்தை தற்போது பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இதை அடுத்து இந்த விஷயம் தெரியாத நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை சொல்லி வைரலாக தெறிக்க விட்டார்கள்.