பேராசை.. பேயை நேரில் பார்த்த VJ அர்ச்சனா.. இது என்ன லூசா..? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் அர்ச்சனா.

இவர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு சீரியல் நடிகையாக பல்வேறு தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளிலே பிரபலமான சீரியல் நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வந்தார் .

VJ அர்ச்சனா:

குறிப்பாக இவர் தமிழில் ராஜா ராணி சீரியல் 2, காமெடி ராஜா கலக்கல் ராணி, முரட்டு சிங்கிள் சீசன் 2.

இப்படி சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவராக பார்க்கப்பட்டார்.

இதனுடைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நேர்மையான குணத்தாலும் தனது நடவடிக்கையாலும் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்து விட்டார் அர்ச்சனா.

இதனால் அவர் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் தட்டிச்சென்றார். குறும்படங்களிலும் இசை ஆல்பங்களிலும். நடித்து இளைஞர்களின் பேவரைட்டான சீரியல் நடிகை ஆகவும் பார்க்கப்பட்டு வருகிறார் .

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தன்னுடைய கருத்தை எந்த இடத்திலும் தைரியமாக ஆகக பதிவு செய்யக்கூடியவர் விஜே அர்ச்சனா.

பேயை நேரில் பார்த்த அர்ச்சனா:

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் விஜே அர்ச்சனா ” பேயை தான் நேரில் பார்த்ததாகவும் அப்படி ஒரு சம்பவம் நிஜத்திலேயே தன் வாழ்க்கையில் நடந்ததாகவும் கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

அது பற்றி பிரபல சினிமா விமர்சகர் ஆன செய்யார் பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

“நான் ஒரு முறை நைட் சூட்டிற்காக போயிட்டு படப்பிடிப்பு முடித்துவிட்டு நடு நேரத்தில் நான் திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தேன்.

அப்போது காரில் வந்து கொண்டிருந்தபோது ஒரு உருவம் என்னுடைய காருக்கு முன்னால் வந்தது. அதை பார்த்ததும் நான் நடுங்கி விட்டேன்.

உடனே கொஞ்சம் காரை திருப்பி டர்ன் பண்ணி எடுத்துட்டு போகும்போது அது என்னோட சைடு மிரரில் வந்து அப்படியே ஒட்டிக்கொண்டது.

அந்த உருவம் என் கண்ணில் அப்படியே இருக்கிறது. ரொம்ப பதறிப் போயிட்டேன் கார் எடுத்துட்டு வந்து பதட்டத்தில் வீட்டில் இருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினேன்.

ஆனால் அவங்களும் நம்பியும் நம்பாமலும் தான் இருந்தாங்க. ஆனால் நான் சொல்வது நிஜமான உண்மை அப்படி ஒரு சம்பவம் நான் நேரிலே பார்த்திருக்கிறேன்.

இது என்ன லூசா..?

எனவே பேய் என்பது நிச்சயம் இருக்கிறது. அப்போதுதான் ஒரு முடிவு பண்ணி இனிமேல் நைட் நேரத்தில் படப்பிடிப்பிற்கு எங்குமே செல்லக் கூடாது.

அப்படி சென்றாலும் தனி ஆளாக செல்லக்கூடாது யாரேனும் கூட துணையாக கூட்டிக் கொண்டு போகணும் என அப்போதுதான் புரிந்து கொண்டேன் என வி ஜே அர்ச்சனா கூறியிருந்தார் என்று செய்யார் பாலு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

மேலும் அர்ச்சனா அதை மற்றவர்களிடம் சொல்லும்போது இது என்ன லூசா? இப்படி உளறுது என பலரும் என்னை கேலி கிண்டல் செய்தார்கள்.

ஆனால், அது நடந்தது உண்மை என அவர் கூறியிருந்தார். எனவே விஜே அர்ச்சனா பேயை நேரில் பார்த்து பதறிப் போனது குறித்து செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.