ஷூட்டிங் முடிஞ்சி ரூமுக்கு வா!.. இளம் நடிகையிடம் வேலையை காட்டிய அப்பா வயது நடிகர்!.

சினிமாவை பொறுத்தவரை பெரிதாக நடிக்க தெரியவில்லை என்றாலும் கூட பல நடிகர்கள்  தங்களது தந்தை தயாரிப்பாளராகவா, அல்லது இயக்குனராகவோ அல்லது நடிகர்களாக இருக்கும் காரணத்தினால் அதை பயன்படுத்தி சினிமாவிற்கு வருகின்றனர்.

சில நடிகைகளும் அப்படி வருகின்றனர். அப்படி வந்து கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கு சிலர் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது ஆனால் சிலருக்கு வாரிசு நடிகர் என்பதாலயே வரவேற்புகள் கிடைத்து விடுகிறது.

ஷூட்டிங் முடிஞ்சி ரூமுக்கு வா

அப்படியான வாரிசு நடிகராக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இப்போது வரை தனக்கென ரசிக்கப்பட்டாளத்தை கொண்டு இருப்பவர் நடிகர் பாலகிருஷ்ணா. தெலுங்கு சினிமாவில் மிகப் பெரும் பிரபலமாக இருந்த என் டி ராமாராவின் மகன்தான் பாலகிருஷ்ணா. என்டி ராமராவ் சினிமாவில் கொடிகட்டி பறந்த பெரிய நடிகர் ஆவார்.

மேலும் அவர் முதலமைச்சர் ஆகவும் இருந்திருக்கிறார். ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சர் என்பதாலேயே அவரது மகனுக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சினிமாவில் ஆரம்பமான இளமை காலம் முதலே பெரிதாக பாலகிருஷ்ணாவிடம் நடிப்பு என்று எதையும் பார்த்து விட முடியாது.

இளம் நடிகையிடம் வேலை

முக்கியமாக அவரது பல நடிப்புகள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கலாய்க்கு உள்ளாகி இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது வயதான பிறகும் தொடர்ந்து பாலகிருஷ்ணா நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் நிறைய திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார் பாலகிருஷ்ணார். அந்த திரைப்படங்களில் எல்லாம் அவருக்கு இரண்டு கதாநாயகிகளும் இருப்பார்கள். அதேபோல பெரும்பான்மையான திரைப்படங்களில் தொடர்ந்து கதாநாயகியுடன் நெருக்கமான காட்சிகள் இவருக்கு இருக்கும்.

அப்பா வயது நடிகர்

வயதான பிறகும் கூட தொடர்ந்து கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. இதனாலேயே பெண்கள் விஷயத்தில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு நடிகராக இவர் இருந்து வருகிறார். அதேபோல பாடல்களும் இவருக்கும் நடிகைகளுக்கும் தொடர்ந்து கவர்ச்சி பாடல்கள் இருப்பதை இப்பொழுது வரை பார்க்க முடியும்.

இந்த நிலையில் அவருடைய திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரபல நடிகையான ராதிகா ஆப்தே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ராதிகா ஆப்தே தமிழில் கபாலி மாதிரியான ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார். இவர் கூறும் பொழுது ஒவ்வொரு நாள் பாலகிருஷ்ணாவை பார்க்கும் பொழுதும் அவரது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்பதை ஒரு விதிமுறையாக வைத்திருக்கின்றனர். அதேபோல நிறைய முறை என்னை அவரது அறைக்கு அழைத்திருக்கிறார். ஆனால் எப்பொழுதும் நான் அங்கு சென்றது கிடையாது அவ்வளவு மோசமானவர் பாலகிருஷ்ணா என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் ராதிகா அப்தே.