வயிற்றில் இவரின் கருவை சுமந்து கொண்டு… சமந்தா இதை செய்ய நினைத்தார்.. பிரபலம் கூறிய தகவல்..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஹீரோயின் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்து பெண்ணான நடிகை சமந்தாவுக்கு தமிழ் ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.

மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்த வளர்ந்த சமந்தா திரை பின்பலமே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தாலும் இன்று தனது முயற்சியால் நட்சத்திர நடிகை என்ற நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறார்.

சமந்தா:

இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

முதன் முதலில் இவர் தமிழில் வெளிவந்த மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

2007 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது. சமந்தா நடிகையாவதற்கு முன்னதாக பல்வேறு கடைகளில் வாசல் முன்பு வெல்கம் கேர்ள் ஆக பணியாற்றி இருக்கிறார்.

அதற்கு ஒரு நாள் ஊதியம் ரூ.100 முதல் ரூ.500 வரை கொடுக்கப்பட்டதாக பல்வேறு பேட்டிகளில் கூட கூறியிருந்தார்.

இப்படியாக அடித்தளத்தில் இருந்து சமந்தா கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையின் மூலமாக சினிமா துறையில் ஜொலிக்க ஆரம்பித்தார்.

தொடர் ஹிட் படங்களில் நடித்து இன்று நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்திருக்கிறார். இவர் தெலுங்கு சினிமாவில் வெளிவந்த ஹேமாயா சேஷாவே திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.

இப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நாக சைதன்யா. அந்த திரைப்படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி நிஜத்திலே காதலிக்க ஆரம்பித்தார்கள்.

கிட்டத்தட்ட எட்டு வருடம் காதலித்து வந்த இவர்கள் பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

காதல் திருமணம்… விவாகரத்து:

2017 ம் ஆண்டு இவர்களது திருமணம் ஹிந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. இந்த திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட நான்கு வருடத்திலேயே விவாகரத்தை நோக்கி சென்றுவிட்டது.

ஆம் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். இந்த விவாகரத்தை அறிவித்த உடனே சமந்தா ரசிகர்கள் பேரதிர்ச்சிக்குள்ளாகி விட்டனர்.

சமந்தாவின் நடவடிக்கை சரி இல்லாததால் தான் நாக சைத்தன்யா விவாகரத்து செய்ததாகவும் சமந்தா பல பேருடன் தொடர்பிலிருந்து வருவதாகவும் கூட செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த விஷயம் இப்படியாக பார்க்கப்பட்டதை தொடர்ந்து சமந்தா விவாகரத்துக்கு பிறகு தொடர்ச்சியாக பாலிவுட் சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து வந்தார்.

இதனிடையே நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவுடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்த நிலையில் திடீரென கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் .

இந்த புகைப்படங்கள் வெளியாகிய இணையத்தில் தீயாய் பரவி பெரும் அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்த நிலையில் சமந்தாவை குறித்து சாகுந்தலம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கும் விஷயம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

வயிற்றில் இவரின் கரு:

அதாவது நான் சாகுந்தலம் படத்தின் கதையை சொல்ல சமந்தாவை நேரில் சந்தித்தேன். அப்போது அவரிடம் கதையை கூறிய போது அவரும் ஓகே சொல்லி படத்தில் நடிக்க தயாரானார்.

ஆனால், ஒரே ஒரு கண்டிஷன் தான் வைத்தார். இந்த படத்தை ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து விடுங்கள்.

ஏனென்றால் அதற்குப் பிறகு நான் குழந்தை பெற்றுக் கொண்டு என் கணவரோடு செட்டிலாகி நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன் என சமந்தா கூறினார்.

எனவே என்னால் உறுதியாக சொல்லமுடியும் நிச்சயம் சமந்தா அந்த நேரத்தில் நாக சைதன்யாவின் கருவை தன்னுடைய வயிற்றில் சுமந்திருந்தார்.

அதனால் தான் அவர் இரண்டு மூன்று மாதத்தில் படத்தை முடிக்க சொல்லி என்னிடம் கூறினார் என அந்த தயாரிப்பாளர் கூறி பேரதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.

சமந்தா கருவுற்றிருந்த போதும் அவருடைய கருவை கலைத்து விவாகரத்தை நோக்கி கொண்டு சென்றது ஏன்? நாகார்ஜுனா குடும்பத்தில் சமந்தாவுக்கு நடந்தது என்ன?என அடுக்கடுக்கான கேள்வி ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.