வயதான நபருடன் ஹரிபிரியா இரண்டாம் திருமணம்..? மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

சன் டிவியில் ஒளிபரப்பாக டிஆர்பி உச்சத்தை தொட்ட சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியிருந்தது.

இதில் பல பெண்கள் நடித்திருப்பார்கள். இதில் சீரியல் நடிகை ஹரிப்ரியா முக்கியமான ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

ஹரிபிரியா:

இந்த சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்களின் மனதை கவர்ந்ததை தொடர்ந்து இவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.

சீரியல்களின் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஹரிப்பிரியாவுக்கு கூடவே பரதநாட்டியம் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

அதனாலே காளி கல்பா என்ற பெயரில் நடன பள்ளி ஒன்றை ஹரிபிரியா நடத்தி வருகிறார். படிப்பில் கெட்டிக்காரியாக இருந்து வந்த ஹரிப்பிரியா பிஎஸ்சி சைக்காலஜி படித்துள்ளார்.

படிப்பு மட்டும் இல்லாமல் இவர் நடனத்தின் மீது படிக்கும்போதே அதிகமான ஆர்வம் இருந்ததால் முறைப்படி நடனத்தையும் கற்றுக் கொண்டார்.

கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருந்தபோதே மீடியா உலகில் நுழைந்து மிகப்பெரிய டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்போடும் கனவோடும் காத்துக்கொண்டிருந்தார் .

அதன் மூலமாகத்தான் அவர் விஸ் காம் படித்து முடித்திருக்கிறார். டைரக்டர் ஆக வேண்டும் ஆசையில் வாய்ப்புகள் தேட ஆரம்பத்த ஹரி பிரியாவுக்கு தன்னுடைய நண்பர்களின் மூலமாக ஆன் ஸ்கிரீனில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது.

கனா காணும் காலங்கள் அம்மாஞ்சி:

அதில் அந்த அளவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்து வந்த ஹரிபிரியா முதன்முதலில் கனா காணும் காலங்கள் ஆடிஷனுக்காக பாம் எழுதி கொடுத்திருந்தார்.

அதில் வாய்ப்பு கிடைக்க முதல் சீரியல் கனா காணும் காலங்கள் தான். அதில் அவர் எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்களில் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து விட்டார்.

அம்மாஞ்சி என்ற ரோலில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருந்த ஹரிப்பிரியாவுக்கு இன்று வரை அம்மாஞ்சி என்பதே அடையாளம் ஆகவும் மாறி இருக்கிறது.

தொடர்ந்து இவருக்கு பல்வேறு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. ஜீ தமிழில் ஒளிபரப்பான மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் என்ற சீரியலில் நடித்து புகழ்பெற்றார் .

அதை எடுத்து வாணி ராண தொடரும் அவருக்கு பெரும் புகழ் தேடி தந்தது. இதனிடையே வாணி ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த விக்னேஷை விக்னேஷை காதலித்து ஹரிபிரியா திருமணம் செய்து கொண்டார்.

வயதான நபருடன் திருமணம்:

இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக கொண்டிருந்த சமயத்தில் தான் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த சில வருடத்திலேயே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகு ஹரிப்பிரியா வாழ்க்கையில் பல போராட்டங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

பின்னர் தொடர்ந்து சீரியல்களில் அதிக நாட்டத்தை செலுத்தி பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக இடத்தை பிடித்தார் .

இதுவரை 25க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹரிப்ரியா தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் அவர் ஒரு வயதான நபர் என்றும் பிரபலமான youtube சேனல் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போன ஹரிப்பிரியா யாருடா நீங்க எல்லாம்? வேற பொழப்பே இல்லையா? என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் இல் பதிவிட்டு இருக்கிறார்.