தன்னை உணவுப்பொருளுடன் ஒப்பிட்டு வர்ணித்த காலா பட நடிகை..! இந்த கூத்தை பாருங்க..!

கோலிவுட் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஈஸ்வரி ராவ். இவர் தெலுங்கு தமிழ், மலையாளம், கன்னடம் என்று தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.

1990 இல் துவங்கி 2000 வரையில் தொடர்ந்து பத்து வருடங்கள் முக்கிய கதாபாத்திரங்களாக நிறைய படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு குறைவான படங்களில்தான் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் ஈஸ்வரி என்பதால் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் தான் எப்பொழுதுமே கிடைத்து வந்திருக்கிறது.

உணவுப்பொருளுடன் ஒப்பிட்டு போட்டோ:

இவர் இயக்குனரும் நடிகருமான எல் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன 1990இல் தெலுங்கில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் மூலமாகதான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் ஈஸ்வரி.

தமிழில் முதன்முதலாக கவிதை பாடும் அலைகள் என்கிற திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு இவருக்கு தமிழில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. விஜய் நடித்த நாளைய தீர்ப்பு, வேடன், குரு பார்வை, சிம்ம ராசி போன்ற நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

காலா பட நடிகை

அப்பொழுது பிரபலமாக இருந்த நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வந்திருக்கிறார் ஈஸ்வரி ராவ். இவர் தமிழில் மிக அதிகமாக எல்லாம் படம் நடித்தது கிடையாது. இருந்தாலும் கூட தமிழில் ஒரு பிரபலமான நடிகையாக இவர் இருப்பதற்கு காரணம் இவருடைய தனிப்பட்ட நடிப்புதான்.

ஒரு திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறார் என்றாலும் கூட அந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க கூடியவர் ஈஸ்வரி ராவ் அதனால் அவரது நடிப்புக்காகவே தனியாக ஒரு வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த கூத்தை பாருங்க

2002 ஆம் ஆண்டு வெளியான விரும்புகிறேன் திரைப்படத்திற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் வாங்கினார் நடிகை ஈஸ்வரி. இப்போது வரை அவர் தமிழில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் 2018 ஆம் ஆண்டு இவர் நடித்த காலா திரைப்படத்திற்காக நிறைய பாராட்டப்பட்டார்.

அதற்காக நிறைய விருதுகளையும் வாங்கினார் நடிகை ஈஸ்வரி ராவ். அது அவருக்கு சினிமாவில் ஒரு ரீ எண்ட்ரியாக இருந்தது. தொடர்ந்து மீண்டும் வாய்ப்புகளை பெற துவங்கினார் ஈஸ்வரி ராவ்.

இந்த நிலையில் சலார் திரைப்படத்திலும் பிரபாஸுக்கு அம்மாவாக இவர் தான் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் பச்சை நிற புடவை அணிந்து பிரபல சிப்ஸ் நிறுவனத்தின் பாக்கெட்டோடு தன்னை ஒப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன கூத்தா இருக்கு என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் தான் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வருகின்றன.