சிவகுமார் வீட்டில் இதை பண்றது இல்ல.. ஜோதிகா குடும்பத்தில் இது தான் நடக்குது.. போட்டு உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் ஒரு சில நடிகர் நடிகைகளில் சூர்யா ஜோதிகா முக்கியமானவர்கள். எஸ்.ஜே சூர்யா இயக்கிய வாலி திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஜோதிகா.

ஆனால் ஜோதிகா அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை அதற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் ஜோதிகாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் முதலே இவர் சூர்யாவுடன் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஜோதிகா குடும்பத்தில் இது தான் நடக்குது.

சிலர் பூவெல்லாம் கேட்டுப்பார் சமயங்களிலேயே இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு விட்டதாக கூறுகின்றனர். ஆனால் இன்னும் சில சினிமா வட்டாரத்தினர் மற்றும் விஷயம் அறிந்தவர்கள் கூறும் பொழுது சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில்தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் காதலித்த நிலையில் இதற்கு நடிகர் சிவகுமார் அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஜோதிகா தனது காதலுக்காக நடிப்பை விட்டுக் கொடுத்தார் சினிமாவை விட்டு விலகியதன் காரணமாக அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சூர்யா வீட்டில் சம்மதித்தனர்.

சிவகுமார் வீட்டில் இதை பண்றது இல்ல

ஆனால் தற்சமயம் மீண்டும் ஜோதிகா சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார் அது மட்டுமின்றி சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவிற்கு வந்த ஜோதிகா கவர்ச்சியான ஆடையை அணிந்து வந்திருந்தார். திருமணத்திற்கு பிறகு சுத்தமாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த ஜோதிகா திடீரென கவர்ச்சியில் இறங்கியது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது கோடி கோடியாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக இருந்தவர் ஜோதிகா.

போட்டு உடைத்த பிரபலம்

இத்தனை ஆண்டுகள் அவர் தனது குடும்பத்திற்காக நடிக்காமல் இருந்து வந்ததே பெரிய விஷயம். இதுவே சிவகுமாருக்கு ஒரு பெருமைதான் ஜோதிகாவிற்கும் சூர்யாவிற்கும் கூட இது பெருமையான விஷயம்தான், ஆனால் இப்பொழுது குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள்.

இனிமேல் மாமனாரின் கட்டுப்பாட்டில் இருக்க அவர் விரும்பவில்லை அதனால் அவர் குழந்தைகளின் படிப்பை காரணம் காட்டி குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஏனெனில் ஜோதிகா மீண்டும் நடிக்கப் போகிறேன் என்று கூறிய பொழுது அவரது வீட்டில் பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் அவரது வீட்டில் சாப்பிடாமல் வெளியில் சாப்பிட்டதாக தகவல்கள் வந்தது. அப்படி என்றால் அவர்களுக்குள் பிரச்சனை இருக்கிறது என்று தானே அர்த்தம். இப்பொழுது மும்பை சென்ற ஜோதிகா மும்பை வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டார். நீண்ட நாட்களாகவே இப்படி ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது அவருக்கு ஆசை.

எனவே தேக்கி வைத்த தனது ஆசையை இப்பொழுது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் ஜோதிகா என்று இது குறித்து பேசி இருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.