இந்த இயக்குனர் என்னை ஒரே நாளில் கருப்பாகிட்டார்.. டெஸ்லா தொப்புள் அழகி திவ்யா துரைசாமி..!

சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் மக்கள் மத்தியில் எளிதாக பிரபலமாகின்றனர். அந்த வகையில் மக்கள் மத்தியில் சமூக வலைதளம் மூலமாக அதிக பிரபலம் அடைந்தவர் திவ்யா துரைசாமி. இவருக்கென்று தனிப்பட்ட ரசிக்கப்பட்டாளம் சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது.

நிறைய திரைப்படங்களிலும் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்து வருகின்றன. இதற்கு நடுவே தற்சமயம் விஜய் டிவியில் ஒரு முக்கிய பிரபலமாக மாறியிருக்கிறார் திவ்யா துரைசாமி. உண்மையான திவ்யா துரைசாமி யார் என்பதை மக்களிடம் காட்டுவதற்குதான் குக் வித் கோமாளிக்கு வந்தேன் என்று ஒரு பேட்டியில் கூட கூறி இருக்கிறார்.

திவ்யா துரைசாமி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் கூட அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்து இருக்கிறது. இந்த நிலையில் மாரி செல்வராஜே இயக்கி வரும் வாழை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திவ்யா துரைசாமி.

கண்டிப்பாக அவருக்கு இந்த திரைப்படம் ஒரு பெரிய வெற்றி படமாக அமையும் என்றும் வாய்ப்புகளை அதிகமாக பெற்று தரும் என்றும் கூறப்படுகிறது. சினிமாவிற்கு வந்தது முதல் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

டெஸ்லா தொப்புள் அழகி

இந்த நிலையில் வாழை திரைப்படத்திற்காக தன்னை மாரி செல்வராஜ் கருப்பாக்கியது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் திவ்யா துரைசாமி. அதில் அவர் கூறும்போது வாழை படத்தை பொறுத்தவரையில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறேன்.

கிராமத்து பெண்ணாக நடிக்க வேண்டும் என்றால் அந்த கலர் டோனில் நாம் நடிக்க வேண்டும். எனவே முதல் நாள் படபிடிப்புக்கு சென்றபோது கருப்பாகதான் மேக்கப் போட்டு கொண்டு சென்றேன். அதை பார்த்த மாரி செல்வராஜ்  பார்க்கிறதுக்கு சுத்தமா செட் ஆகல.

என்னை ஒரே நாளில் கருப்பாகிட்டார்

எதுக்கு இப்படி கருப்பா மேக்கப் போட்டுக்கிட்டு வந்து இருக்கீங்க என்று கேட்டார். அதற்கு பிறகு என்னிடம் தேங்காய் எண்ணெயை எடுத்து உடம்பும் தேய்த்து வெயிலில் இரண்டு நாட்கள் இருக்க சொன்னார். மேலும் நான் பார்க்கும் போதெல்லாம் நீங்கள் வெயிலில் நிற்க வேண்டும் குடை நிழலிலோ அல்லது மர நிழலில் நிற்க கூடாது என்று கண்டிஷன் போட்டார்.

அதே மாதிரி இரண்டு நாள் வெயிலில் நின்ற பிறகு என்னுடைய கலர் டோன் மாறிவிட்டது. அந்த காலர் டோன் போகக்கூடாது என்பதற்காகவே படபிடிப்பு முடியும் வரை சோப்பு போட்டோ ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணியோ குளிக்கவில்லை என்று கூறுகிறார் திவ்யா துரைசாமி.

திரும்பவும் என்னுடைய பழைய கலர் எனக்கு வருவதற்கு ஆறு மாதம் ஆகிவிட்டது என்று அவர் பேட்டியில் கூறி இருக்கிறார்.