விளம்பரத்துக்காக வாழ்க்கையை இழந்த நடிகைகள்.. அதிர வைக்கும் உண்மைகள்.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

நடிகர் நடிகைகள் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் படித்து விடுகிறார்கள்.

அதன் பிறகு காலங்கள் செல்ல செல்ல புது நடிகர், நடிகைகளின் வரவுகளால் பின்னர் மார்க்கெட் மந்தமாகி சினிமாவில் அடையாளம் இல்லாமல் போகின்றனர்.

பட வாய்ப்பு குறைந்த உடனே விளம்பரம்…

அந்த சமயத்தில் திடீரென விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்து தன்னை பிரபலம் ஆக்கிக் கொள்வதோடு அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் பார்க்கிறார்கள் .

அப்படித்தான் ஒரு காலத்தில் பிரபலமான நட்சத்திர நடிகர்களாக இருந்தவர்கள் மார்க்கெட் குறைந்து போனதால் திடீரென மோசமான விளம்பரங்களில் நடித்ததை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படித்தான் நடிகர் அப்பாஸ் டாய்லெட் கழுவும் விளம்பரத்தில் நடித்திருந்தார். அவரது நிலைமை அந்த அளவுக்கு மோசமாக தள்ளப்பட்டு ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல விமர்சகர் கே ராஜன் அவர்களிடம் தொகுப்பாளினி…

இப்ப இருக்குற நடிகர் நடிகைகள் எல்லாம் வெறும் விளம்பரத்திற்காக அலையோ அலையோன்னு அலஞ்சுட்டு இருக்காங்க என கேட்டதற்கு…. பதில் அளித்த தயாரிப்பாளர் கே ராஜன்…

30 வருஷம் வாழ்ந்தாகனும்னா விளம்பரத்தில் நடிக்கணும்:

என்னமா பண்றது படவாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்குறதில்ல இல்ல… படம் இருந்தா தன்னை பெருசா பிரபலப்படுத்திக்கலாம்.

சினிமா வாய்ப்பு எப்போதும் கிடைக்கிறது இல்ல… என்ன பண்றது? 30 வருஷம் இன்னும் வாழ்ந்தாகணும் பணம் கொடுக்குற ஒரு வேலை வேணும்ல?

நடிப்பை விட்டால் அவங்களால வேற எந்த வேலையும் செய்ய முடியாது. இந்த அளவுக்கு எந்த வேலையிலும் பணம் கிடைக்காது.

எனவே விளம்பரங்களில் நடிப்பதற்காக விவாகரத்து செய்யுறாங்க. பின்னர் அசிங்கமான மூஞ்சி இருக்கும் நபர்களை திருமணம் செய்து கொள்வது என்று எதையோ ஒன்ன நடிகர் நடிகைகள் செய்து கொண்டிருக்கிறார்கள் .

அவர்கள் செய்யும் எல்லாமே விளம்பரத்திற்காக தான். எனவே விளம்பரத்திற்காக நடிகர் , நடிகைகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

அதுமட்டுமில்லாமல் நடிகைகள் ஒரு விளம்பரத்தை செய்கிறார்கள் என்றால் அதை பாமர மக்கள் சாதாரண மக்கள் கூட மிகுந்த நம்பிக்கையோடு வாங்கி விடுவார்கள் .

போலியோ…. மனோரமா மருந்து

அப்படித்தான் போலியோ மருந்துக்கு மனோரமா மருந்து என்று பெயர் வைத்தார்கள்… அன்று மனோரமா தான் அந்த போலியோ மருந்துக்கு விளம்பரம் செய்திருந்தார்.

அந்த சமயத்தில் மனோரமாவின் விளம்பரம் தான் கை கொடுத்தது என கே ராஜன் பேசியிருந்தார்.

எனவே நடிகைகளையும் தாண்டி நிறுவனங்களும் பிரபலமான முகங்களை விளம்பரங்களில் நடிக்க வைக்க அதிக ஆர்வத்தை செலுத்துகிறார்கள்.

அந்த மாதிரி பிரபலமான முகத்தை விளம்பரம் செய்யக்கூடிய பொருள் மிக விரைவாக மக்கள் இடையே சென்றடைந்து வீரப்பனை ஆகி விடும் எனக் கூறினார் காந்தராஜ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய பிஸியான நடிகராக இருந்து வந்தாலும் கூட பெரிய இடத்து விழாக்கள் என்றால் அங்க போய் நடனமாடுவார்.

இது விளம்பரத்திற்காகவா? அல்லது பொழுது போக்குக்காகவா?என கேட்டதற்கு பதில் அளித்த கந்தராஜ்… அவருக்கு வேற வேலை என்ன இருக்கு?

ரஜினிக்கு ரூ. 2 கோடி கொடுத்த அம்பானி:

வேலை வெட்டி இல்லாம சும்மா ஒக்காந்து இருக்க சூப்பர் ஸ்டாருக்கு பெரிய இடத்திலிருந்து அழைப்பு வருது.

பணக்கார வீட்டுல கூப்பிடுறாங்க…. அங்க போனால் சினிமாவில் நடித்து சம்பாதிக்கும் அளவுக்கு காசு கிடைச்சிடுது.

அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு கிட்டத்தட்ட ரூ. 2 கோடி கொடுத்திருக்கிறார்கள். அந்த வாட்ச் கொடுத்தாங்கல்ல அதோட விலைமதிப்பு ஒன்னு ஒன்னு ரூ. 2 கோடி.

அதேபோல் சச்சின் டெண்டுல்கர் எல்லாம் அந்த திருமண நிகழ்ச்சிக்கு வராங்க என்று சொன்னார்கள்.

அப்பவே நினைத்தேன் காசு இல்லாம டெண்டுல்கர் எல்லாம் வரவே மாட்டாரு… வீட்டு வாசல் படி கூட காசு இல்லாமல் கால் எடுத்து எடுத்து வைக்க மாட்டார்.

அந்த அளவுக்கு அவர் பணத்தாசை பிடித்தவர்….. அது மட்டும் இல்லாமல் எந்த ஒரு ஏழை மக்களுக்கு உதவி செய்ததே கிடையாது.

அவர் மட்டும் இல்லை…. எந்த ஒரு கிரிக்கெட் பிளேயரும் மக்களுக்காக செலவு செய்வதில்லை என உண்மையை உரக்க சொன்னார் காந்தராஜ்.