விவாகரத்து செய்தி.. இன்னும் அதை மட்டும் பண்ணாத ஜெயம் ரவி மனைவி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி முதன் முதலில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.

இவரது தந்தை தான் எடிட்டர் மோகன் இவரது அண்ணன் இயக்குனர் ராஜா இப்படி மிகப்பெரிய திரை பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜெயம் ரவிக்கு பட வாய்ப்புகள் என்னவோ சுலபமாக கிடைத்துவிட்டது.

நடிகர் ஜெயம் ரவி:

ஆனால், இவர் தனது திறமையால் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி நட்சத்திர நடிகர் என்ற இடத்தில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி ,சம்திங் சம்திங் ,சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தாம் தூம், தில்லாலங்கடி, எங்கேயும் காதல், பூலோகம், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் இப்படி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த அருள்மொழி வர்மனாக எல்லோரது கவனத்தையும் மிகப்பெரிய அளவில் ஈர்த்து புகழ்பெற்றார் .

தற்போது ஜெயம் ரவியின் கைவசம் பிரதர் என்ற திரைப்படம் இருக்கிறது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் கமிட்டாகி நடித்து வருகிறார்.

ஆர்த்தியுடன் காதல் திருமணம்:

இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் .

ஆர்த்தி பிரபல தயாரிப்பாளரான சுஜாதாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சுஜாதா தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார்.

ஜெயம் ரவியும் தனது மாமியாரின் தயாரிப்பில் டிக் டிக் மற்றும் சைரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் .

இதில் கடைசியாக வெளிவந்த சைரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்துவிட்டது.

இதனிடையே நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் சில நாட்களுக்கு முன்னர் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு தீயாய் பரவியது.

மேலும் ஆர்த்தி தனது சமூக வலைதளங்களில் ஜெயம் ரவி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அத்தனையும் டெலிட் செய்துவிட்டார். இதுவே அதற்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்பட்டது.

விவாகரத்து… இன்னும் அத மட்டும் பண்ணல:

இப்படியாக இவர்களின் விவாகரத்து செய்திகள் உலா வந்து கொண்டிருந்த சமயத்தில் ஆர்த்தி தன் கணவர் ஜெயம் ரவி பெயரை மட்டும் இன்றுவரை டெலிட் செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறார்.

அதுவும் மேரேஜ் ஜெயம் ரவி என்ற கேப்ஷனையும் அவர் தனது Instagram பக்கத்தில் இருந்து நீக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் அவர்கள் வதந்திகளுக்கு சைலன்டான முறையில் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இது வெறும் பொய்யான தகவல் எனபதை இதன் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஆர்த்தி ரவி.