20 லட்சம் வாடகை பாக்கி.. நைஸாக யுவன் ஷங்கர் ராஜா செய்த சில்லறைத்தனம்.. போலீசில் புகார்..!

பெரிய இடம் வாடகைக்கு கொடுத்தால் கட்டாயம் காசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது வீட்டை வாடகைக்கு கொடுத்து ஏமாந்து போன நபர் தற்போது போலீசில் புகார் அளித்து இருப்பது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அப்படி அந்த பெரிய இடத்து நபர் யார் என்று சொன்னால் நீங்களும் அதிர்ச்சி அடைவீர்கள். இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா தற்போது வாடகை கொடுக்காமல் சைடு கேப்பில் எஸ்கேப்பான விஷயம் தான் இணையத்தில் பெரும் அளவு பேசப்பட்டு வருகிறது.

தமிழ் திரை உலகில் இசைஞானி என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய இசைஞானியின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா பல திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர்.

20 லட்சம் வாடகை பாக்கி..

இந்நிலையில் 20 லட்சம் ரூபாய் அளவு வாடகை பாக்கி வைத்திருக்கக் கூடிய யுவன் சங்கர் ராஜா தன்னிடம் சொல்லாமல் வீட்டை காலி செய்ததை அடுத்து வீட்டின் உரிமையாளர் அஜ்மத் பேகமின் சகோதரர் முகமது ஜாவித் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் யுவன் சங்கர் மீது புகார் அளித்திருக்கிறார்.

அந்த புகாரில் தங்களுக்கு சேர வேண்டிய வாடகை வாக்கித்தொகையை பெற்றுத்தர வேண்டிய, வீட்டிற்கு ஏற்பட்டு இருக்கும் சேவத்திற்கான இழப்பீடினை பெற்று தர வேண்டும் என்று மனுவில் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற வேளையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இணையதள வாசிகள் விஜய் போன்ற முன்னணி நடிகரின் படத்திற்கு இசையமைத்து கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கும் யுவன் சங்கர் வாடகை கூட கொடுக்காமல் இருப்பாரா அல்லது கையில் காசை இல்லையா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

மேலும் தற்போது யுவன் சங்கர் ராஜா தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் தனது அபாரமான இசைத்திறனை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இசை அமைத்து இருக்கிறார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரை அரங்குகளில் வெளி வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் கூடிய வகையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் தான் யுவன் சங்கர் ராஜா மீது போலீசில் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார் வீட்டு ஓனர். இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கத்திற்கு அருகில் இருக்கும் லேக் ஏரியாவில் உள்ள அஜ்மத் பேகம் என்பவரது சொந்த வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வருகிறார்.

இந்நிலையில் இந்த வீட்டில் தொடர்ந்து வசித்து வரும் யுவன் சங்கர் ராஜா வீட்டுக்கான வாடகையை செலுத்தாமல் 20 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் வீட்டு ஓனர் அஜ்மத் வேகம் வீட்டுக்கு வாடகை கேட்கும் போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா வாடகை தர மறுத்து பேசியதாக சொல்லப்படுகிறது.

நைஸாக யுவன் ஷங்கர் ராஜா..

மேலும் வீட்டு உரிமையாளருக்கு எந்த தகவலும் கொடுக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை காலி செய்துவிட்டு யுவன் சங்கர் ராஜா வெளியேறி இருக்கிறார். இந்த விஷயத்தை பார்த்து அக்கம் பக்கத்தினர் வீட்டின் உரிமையாளருக்கு விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள்.

இந்நிலையில் 20 லட்சம் ரூபாய் அளவு வாடகை பாக்கி வைத்திருக்கக் கூடிய யுவன் சங்கர் ராஜா தன்னிடம் சொல்லாமல் வீட்டை காலி செய்ததை அடுத்து வீட்டின் உரிமையாளர் அஜ்மத் பேகமின் சகோதரர் முகமது ஜாவித் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் யுவன் சங்கர் மீது புகார் அளித்திருக்கிறார்.

சில்லறைத்தனம்.. போலீசில் புகார்..

அந்த புகாரில் தங்களுக்கு சேர வேண்டிய வாடகை பாக்கித் தொகையை பெற்றுத்தர வேண்டியும், வீட்டிற்கு ஏற்பட்டு இருக்கும் சேதத்திற்கான இழப்பினை பெற்று தர வேண்டும் என்று மனுவில் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற வேளையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இணையதள வாசிகள் விஜய் போன்ற முன்னணி நடிகரின் படத்திற்கு இசையமைத்து கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கும் யுவன் சங்கர் வாடகை கூட கொடுக்காமல் இருப்பாரா? அல்லது கையில் காசை இல்லையா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி உள்ளதோடு ரசிகர்களின் மத்தியில் பேசப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.