கருக்கலைப்பு செய்த ஆண்ட்ரியா.. கரு இவருடையதா..? பரபரப்பை கிளப்பிய நடிகர்.. எல்லை மீறி போறாரே..

தமிழில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பிறகு நடிகையாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சேர்ந்த பெண் ஆவார். அரக்கோணத்தை சேர்ந்த ஆண்ட்ரியா இளம் வயது முதலே பாடல்கள் பாடுவதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இதனால்தான் முதன் முதலாக பாடகியாகி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதன்முதலாக அந்நியன் திரைப்படத்தில் வந்த கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலில் பாடி இருந்தார் ஆண்ட்ரியா. அந்த பாடலுக்கு அப்பொழுது நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியாவின் குரலும் மற்ற பெண்களிலிருந்து தனிப்பட்டதாக இருந்தது. அதனால் அவருக்கு நிறைய பாடல்கள் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கு நடுவே பார்ப்பதற்கு நடிகை போல அழகாக இருந்ததால் இவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது.

அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு முதன்முதலாக பச்சைக்கிளி முத்துச்சரம் என்கிற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு நடித்திருந்தார். பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தைப் பொறுத்தவரை அந்த படம் வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

கரு இவருடையதா

அதனால் ஆண்ட்ரியாவும் பிரபலமாகவில்லை. ஆனால் 2010ல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார் ஆண்ட்ரியா. மேலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலும் நிறைய பாடல்களை பாடி இருந்தார்.

அதன் மூலமாக அதிக பிரபலமாகி இருந்தார். அதற்கு பிறகு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். விஸ்வரூபம் திரைப்படத்தில் மீண்டும் ஒரு பெரிய கதாபாத்திரம் இவருக்கு கிடைத்தது. கமலுடன் சேர்ந்து பணிபுரியும் ஒரு கதாபாத்திரமாக அதில் இருந்தார் ஆண்ட்ரியா.

பிறகு என்றென்றும் புன்னகை திரைப்படத்திலும் இவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. தொடர்ந்து இந்த மாதிரி முக்கிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார் ஆண்ட்ரியா. வடசென்னை, அரண்மனை மாதிரியான படங்களில் இன்னும் அதிக வரவேற்பு பெற்றார் ஆண்ட்ரியா.

எல்லை மீறி போறாரே

ஆண்ட்ரியாவின் காதல் கதையை பொறுத்த வரை அவர் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் இசையமைப்பாளர் அனிரூத்தை காதலித்து உள்ளார் ஆனால் அந்த காதல் பிறகு தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய போது ஆண்ட்ரியா குறித்து சர்ச்சையான ஒரு விஷயத்தை கூறினார். அதில் அவர் கூறும் பொழுது ஆண்ட்ரியாவை கர்ப்பம் ஆக்கிய அரசியல்வாதியின் மகன் என்று கூறினார்.

இப்படி நான் கூறுவதற்காக கோபப்பட வேண்டாம். இதை ஆண்ட்ரியாவை கூறியிருக்கிறார். தற்சமயம் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறார். ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லை இவர் ப்ரோக்கன் என்கிற பெயரில் ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார்.

அதில் சில ரகசியங்களை சொல்லி இருக்கிறார். அதில் அவர் தன்னை ஒரு அரசியல்வாதியின் மகன் கர்ப்பமாகிவிட்டார் ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். வேறு வழி இல்லாமல் அதனால் ஆண்ட்ரியாவும் கருக்கலைப்பு செய்து கொண்டார் இதனை அந்த புத்தகத்தில் அவரே குறிப்பிட்டு இருக்கிறார் என்று கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.

இதனை அடுத்து பயில்வான் ரங்கநாதன் எல்லை மீறி போகிறார் என்று இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.