போடுடா வெடிய.. கங்குவாவுக்கு பின் வாடிவாசல் Sure சூர்யா.. உறுதியான பேச்சால் ரசிகர்கள் கொண்டாட்டம்!..

சுதந்திர தினத்தை அடுத்து பல திரைப்படங்கள் தமிழ் திரை உலகில் வெளி வந்து ரசிகர்களுக்கு நல்ல தீனியை போட்டுள்ளது. அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான் முதல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ரகு தாத்தா படம் வரை சொல்லலாம்.

மேலும் அடுத்ததாக ரஜினிகாந்தின் வேட்டையன் முதல் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் கங்குவா வரை ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்ற வேளையில் சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது.

கங்குவா-க்கு பிறகு வாடிவாசல் உறுதி..

வெற்றிமாறன் இயக்கத்தில் பல திரைப்படங்கள் மிகச் சிறப்பான முறையில் ரசிகர்களை மகிழ்வித்து சிந்திக்க வைக்க கூடிய படங்களாக இருக்கும் அந்த வகையில் வாடிவாசல் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது.

எனினும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக இந்த படத்தின் முதல் கட்ட பணி நடந்ததை அடுத்து விரைவில் படப்பிடிப்புகள் துவங்கப்படும் என்ற நிலையில் சூர்யா இந்த படத்தில் அதிக ஈடுபாடு காட்டாமல் சொந்த ஊரிலிருந்து மும்பைக்கு குடி பெயர்ந்தார்.

இதனை அடுத்து இவர் இரண்டு வருடங்களாக பாலிவுட் படங்களில் நடிக்க தீவிரமாக கவனத்தை செலுத்தி வருகிறார் என்று சொல்லப்பட்ட வேளையில் அதற்கு ஏற்றபடி தான் அவர் எந்த தமிழ் படங்களிலும் நடித்து அந்த படம் வெளிவரவில்லை.

இந்நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளி வர உள்ள நிலையில் சூர்யாவின் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்று வந்துள்ளது.

வாடிவாசல் Sure சூர்யா தான்..

மேலும் தமிழர்களின் வீர விளையாட்டை உலகுக்கு பறைசாற்றும் விதமாக வாடிவாசல் இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த வேளையில் இந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது பலருக்கும் ஏமாற்றத்தை தந்தது.

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் அந்த படத்தை பற்றி என்ன செய்தார் என்று தெரியாத நிலையில் விடுதலை படத்தில் பிஸியாக இருந்ததை அடுத்து அந்த படம் கைவிடப்பட்டதாக ரசிகர்களின் மத்தியில் பேச்சுக்கள் அடிபட்டது.

எனினும் விடுதலை படம் ரிலீஸ் ஆன பிறகு சூர்யாவிற்கு பதிலாக வாடி வாசலில் வேறு நடிகர் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக இணையம் எங்கும் பல்வேறு தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் தற்போது சூர்யா தான் வாடிவாசல் படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது இணையம் எங்கும் விஷயம் கசிந்து அந்த கிசுகிசுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய விதத்தில் படத்தின் தயாரிப்பாளர் பேசியிருக்கிறார்.

மகிழ்ச்சியில் இருக்கும் ரசிகர்கள்..

இதனை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தானு ஜூலை 5-ஆம் தேதி மாலை 3 மணி அளவில் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சூர்யா என மூவரும் இணைந்து படத்தை எவ்வாறு எடுக்கப் போகிறோம் என்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தி இருப்பதாக கூறி இருக்கிறார்.

மேலும் இந்த படம் மிகவும் கஷ்டமான படம் என்பதால் இதனால் யாருக்கும் ஆபத்து வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கக்கூடிய இவர்கள் லண்டனில் ஜுராசிக் பார்க் படத்தை எடுத்த நிறுவனத்திடம் அனிமேஷன் வேலைகளை கொடுக்க ஆலோசனைகள் செய்து வருகிறார்கள்.

எனவே வாடிவாசல் திரைப்படமானது வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து படப்பிடிப்புக்கு வரும் என்று சொல்லப்பட்டு இருப்பதால் கங்குவா திரைப்படத்தை முடித்த கையோடு வாடி வாசலில் சூர்யா இணைந்து விடுவார் என்ற தகவல்கள் அதிகளவு பரவி வருகிறது.