“உன்னை கல்யாணம் பண்ணிட்டு அத பண்ணனும்”..? பிரியா பவானியின் அழகில் மயங்கி அத்துமீறிய ரசிகர்!

தமிழ் சினிமா நடிகையான் பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளினியாக மீடியாவை துறையில் நுழைந்து அதன் பிறகு சின்னத்திரை சீரியல் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.

பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க இந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

நடிகை பிரியா பவானி சங்கர்:

திரை பின்பலமே இல்லாத குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்த பிரியா பவானி சங்கர் மீடியாவில் இருந்து ஆர்வத்தால் செய்தி வாசிப்பாளினியாக இவர் முதன் முதலில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.

அத்துடன் தொகுப்பாளராகவும் தனது பணியை செய்து வந்த பிரியா பவானி சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

அந்த தொடர் அவருக்கு பெயரும் புகழும் கொடுத்தது மட்டுமே இல்லாமல் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த சீரியலில் பிரியா என்ற கேரக்டரில் நடித்து இளைஞர்கள் அத்தனை பேரையும் கவர்ந்து விட்டார் பிரியா பவானி சங்கர் .

இந்த சீரியல் பார்க்காதவர்கள் கூட பிரியாவிற்குகாக கல்யாண முதல் காதல் வரை சீரியல் பார்க்க துவங்கினார்கள் .

இதனால் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன பிரியா பவானிசங்கருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர துவங்கியது.

சீரியல் To சினிமா:

இதனால் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே அவர் பாதியில் இருந்து விலகி சென்று திரைப்படங்களில் கமிட் ஆகி நடிக தொடங்கினார்.

அதன் பிறகு தான் கல்யாணம் முதல் காதல் தொடரில் இவருக்கு பதில் சைத்ரா ரெட்டி நடித்திருந்தார்.

தற்போது அந்த சீரியல்தான் காதலும் மோதலும் என்ற பெயரில் மீண்டும் புதிதாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதனிடையே திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த பிரியா பவானி சங்கர் முதன் முதலில் மேயாத மான் திரைப்படத்தில் நடித்து தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார்.

முதல் திரைப்படமே அவருக்கு பெயரும் புகழும் பெற்று தந்ததை தொடர்ந்து மான்ஸ்டர், மாஃபியா, யானை திருச்சிற்றம்பலம், அகிலன், 10 தல, ருத்ரன் போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .

அது மட்டும் இல்லாமல் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராகவும் இவர் தனது இடத்தை பிடித்தார்.

பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் வாய்ப்பு பிரியா பவானி சங்கருக்கு தேடிவந்தது.

இதன் மூலமாக அவர் இந்தியன் 2 மற்றும் பத்து தல உள்ளிட்ட தொடர் தோல்விகளை சந்தித்தார்.

இதனால் பிரியா பவானிசங்கர் ராசி இல்லாத நடிகையாக அண்மையில் மோசமாக விமர்சிக்கப்பட்டார்.

இதை அடுத்து தற்போது வெளிவந்திருக்கும் டிமாண்டி காலனி 2 திரைப்படம் பிரியா பவானி சங்கருக்கு வெற்றி மகுடத்தை சூட்டியிருக்கிறது .

உன்னை கல்யாணம் பண்ணிக்கவா..?

இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகிறார் பிரியா பவானி சங்கர். இந்த நிலையில் தற்போது அவர் நடத்திய லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த சிகர் ஒருவர் நான் உங்களை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்… நாம் அடுத்த வாழ்க்கை வாழலாமா? என ஓப்பனாகவே ப்ரபோஸ் செய்து விட்டார்.

அந்த அளவுக்கு பிரியா பவானி சங்கரின் அழகில் மயங்கி ரசிகர்கள் அவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள் .

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாக நீண்ட நாட்களுக்கு பிறகு வெற்றியை கண்டுள்ள பிரியா பவானி சங்கர் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதை பார்க்க முடிகிறது என ரசிகர்கள் கூறி அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.