“என் மேல இருக்க லவ்ல பண்றார்ன்னு நெனச்சேன்..” ஆனால்.. விவாகரத்து குறித்து சீரியல் நடிகை பகீர்..!

சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகைகள் தற்போது ரசிகர்களின் மத்தியில் பெரும் அளவு பேமஸ் ஆகி இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவர்கள் ரசிகர்களோடு பகிர்ந்து வருவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகம் ஆகியிருக்கிறார். தற்போது கணவரை தெரிந்து வாழ்ந்து வரும் இவர் தனக்கு திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் குறித்து அண்மை பேட்டியில் விரிவாக பேசியிருக்கிறார்.

சீரியல் நடிகை சந்தியா..

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட சந்தியா, சின்னத்திரையில் அத்திப்பூக்கள், சந்திரலேகா போன்ற சீரியல்களில் முக்கிய கேரக்டர் ரோல்களை செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்.

இல்லத்தரசிகள் விரும்பும் சீரியல் நடிகைகளில் ஒருவராக திகழக்கூடிய இவர் தனது திருமண வாழ்க்கையில் நிறைய கசப்புகளை சந்தித்து இருக்கிறார். மேலும் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளிலேயே தன் கணவரை விட்டு வேண்டாம் என பிரிந்து விவாகரத்து பெற்று விட்டார்.

இன்று விவாகரத்துக்கள் அதிகரித்து வரும் போது சினிமா துறையில் இருக்கும் நபர்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எனினும் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்த சமயத்திலேயே பல பிரச்சனைகள் தலை தூக்கியது என்று அந்த பேட்டியில் சொன்னார்.

என் மேல இருக்க லவ்ல பண்றார்ன்னு நெனச்சேன்..

அப்படி இருவர் மத்தியிலும் ஏற்பட்ட பிரச்சனை திருமணத்திற்கு பிறகு சரியாகிவிடும் என்று நினைத்து இருந்த சமயத்தில் அவரது அம்மாவும் அதே வார்த்தையை சொல்ல திருமணத்திற்கு ஓகே சொல்லி திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் கழிந்த இரண்டு ஆண்டுகள் எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்காமல் அப்படியே அந்த ஆண்டுகள் நகர்ந்து சென்றதாக கூறியதோடு இதனை அடுத்து தான் விவாகரத்து பெற்றதாகவும் சொல்லி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அந்த இரண்டு ஆண்டுகளில் பல பிரச்சனைகளை சந்தித்த இவர் தன்னுடைய போனை செக் பண்ணி அதில் ஏதோ பார்க்க கூடாததை பார்த்துவிட்டது போல் அவரது கணவர் தன்னிடம் நடந்து கொண்டதாக யூடியூப் சேனல் பேட்டியில் பேசியிருக்கிறார்.

மேலும் அந்த மெசேஜில் ரசிகர் ஒருவர் உங்களை சீரியலில் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்லி இருந்தார். இந்த மெசேஜுக்கு நான் பதில் கூட அனுப்பவில்லை. இதை பார்த்துவிட்டு தான் தையத் தக்க என்று தன்னோடு சண்டை போட்டார்.

விவாகரத்து குறித்து சீரியல் நடிகை பகீர்..

இதனைத் தொடர்ந்து எதுவுமே பேசாமல் நான் இதெல்லாம் நம்ம மேல இருக்க கூடிய லவ்ல தான் பண்ணுறாரு கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் நோ யூஸ். எங்களுக்கு 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

2019 ஆண்டுக்குள் எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. அவங்க எதிர்பார்ப்பது போல நான் இல்லை. நான் எதிர்பார்ப்பது போல அவர் இல்லை என்ற புரிதல் தான் கடைசியில் மிஞ்சியது.

இதனால் இருவரும் மியூச்சுவல் ஆகவே பிரிந்துவிட முடிவு செய்ததை அடுத்து என் பிரிவுக்கு இந்த ஒரு காரணம் மட்டும் உள்ளது என்று சொல்ல முடியாது. இது போல பல காரணங்கள் உள்ளது என்று நடிகை சந்தியா பேசியிருப்பது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.