என்னை பார்க்க வந்த பெண் உள்ள இருந்து அதை எடுத்து காட்டினாங்க.. ஆடிப்போன மைக் மோகன்.. அவங்க புருஷன் காலில் விழணும்!..

சினிமாவில் ஒரு காலத்தில் அதிகமாக கொடி கட்டி பறந்து வந்தவராக அதே சமயம் நிறைய பெண் ரசிகர்களை கொண்டவருமாக நடிகர் மைக் மோகன் இருந்து வருகிறார். சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து அதிக வரவேற்பு பெற்ற நடிகராக இவர் இருந்தார்.

எப்போதுமே சினிமாவில் இளம் நடிகர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட வாய்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கும். அப்படி வரும் நடிகர்கள் மிக எளிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட முடியும். ஆனால் அதற்கு அவர்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டி இருக்கும்.

என்னை பார்க்க வந்த பெண்

அந்த வகையில் வந்த வேகத்திற்கு மைக் மோகன் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானார். அவர் நடித்த பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார் மைக் மோகன். மைக் மோகனை பொருத்தவரை அவர் பெரும்பான்மையான திரைப்படங்களில் பாடல்கள் பாடுபவராகதான் நடிப்பார்.

அவர் எப்பொழுதுமே கையில் மைக்கை வைத்துக்கொண்டு நடிப்பதால் அவரது பெயர் மைக் மோகன் என்று ஆனது. ராமராஜனுக்கு பிறகு பாடல் பாடுபவராக நடித்து அதிக வரவேற்பை பெற்றவர் மைக் மோகன்தான்.

ஆடிப்போன மைக் மோகன்

அப்போதைய காலக்கட்டத்தில் பாடல் பாடுபவர்களாக கதாநாயகன் நடிப்பது ஒரு செண்டிமெண்டாக நல்ல வெற்றியை கொடுத்து வந்தது உதாரணத்திற்கு நடிகர் கார்த்தி கூட நிறைய திரைப்படங்களில் பாடல் பாடுபவராக நடித்திருப்பதை பார்க்க முடியும்.

ஆனால் வெகு சில காலங்களிலேயே நடிகர் மைக் மோகனுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின. கொஞ்ச காலங்களிலேயே அவருக்கு வரவேற்பு என்பது இல்லாமல் போனது. புதுமுக நடிகர்கள் வர துவங்கிய பிறகு மைக் மோகன் ஒட்டுமொத்தமாகவே சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார்.

புருஷன் காலில் விழணும்

இந்த நிலையில் தற்சமயம் வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் திரைப்படத்தில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்கி இருக்கிறார் மைக் மோகன். எடுத்த உடனே விஜய் திரைப்படத்தில் வாய்ப்பை பெற்றிருப்பதால் இது அவருக்கு பெரிய ரீ எண்ட்ரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளையும் மைக் மோகன் பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மைக் மோகன் தனது ரசிகை ஒருவர் தன்னை சந்திக்க வந்ததை குறித்து கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு தாய் ஒருவர் என்னை சந்திக்க வந்திருந்தார்.

அவர் என்னிடம் வந்து அவரது தாலியை எடுத்து காட்டினார். அந்த தாலியில் என்னுடைய புகைப்படம் இருந்தது. அதனை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்னமா இப்படி தாலியில் என் படத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அவர் எனக்கு உங்களை இளம் வயது முதலே மிகவும் பிடிக்கும் சார் என்  கணவரும் இது குறித்து எதுவும் கூறவில்லை அதனால் நானும் சரி என்று அப்படியே வைத்துக் கொண்டேன் நான் இறுதிவரை இதை அப்படியே வைத்துக் கொள்வேன் என்று கூறினார். அவருடைய கணவரை நேரில் பார்த்தால் அவருடைய காலில் விழ வேண்டும். இந்த மாதிரியான ரசிகர்கள் எனக்கு இருப்பது தான் எனக்கு மிகப்பெரிய வரமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் மைக் மோகன்.