அந்த ஆடைக்காக அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூப்பிட்டாங்க.. ஒரு ஆடையால் துயரத்துக்கு உள்ளான வி.ஜே அர்ச்சனா.

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் தொகுப்பாளர்களில் மிக முக்கியமானவர் வி.ஜே அர்ச்சனா. வி.ஜே அர்ச்சனா தன்னுடைய இளம் வயது முதலே சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆரம்பத்தில் இவருக்கு சன் டிவியில் அதிக வரவேற்புகள் கிடைத்தன தொடர்ந்து அதற்கு பிறகு ஜீ தமிழ் விஜய் டிவி என்று எல்லா சேனல்களிலும் வரவேற்பை பெற்றார். இப்போது அவர் ஒரு ஆல்ரவுண்டர் என்றுதான் கூற வேண்டும் தமிழில் உள்ள எந்த சேனலிலும் அவரை தொகுப்பாளராக அழைத்தாலும் அவர் செல்ல முடியும் என்கிற அளவிற்கு அவருக்கு வரவேற்புகள் இருந்து வருகின்றன.

வி.ஜே அர்ச்சனா

மெல்ல தற்சமயம் தன்னுடைய மகளையும் திரையில் அறிமுகம் செய்து வருகிறார் அர்ச்சனா. சின்னத்திரையில் வரவேற்பு பெற்றதன் மூலமாக நிறைய சம்பாதித்து விட்டார் அர்ச்சனா. அதனை தொடர்ந்து நிறைய யூடியூப் சேனல்கள் தற்சமயம் அவரை வலியுறுத்தி வருகின்றன.

அவர்களுடைய சேனலில் பேட்டி எடுப்பதுக்காக அர்ச்சனாவை கேட்டு வருகின்றனர். ஆனால் அந்த மாதிரி பேட்டிகளை தொகுத்து வழங்குவது பெரிதாக வரவேற்பை ஏற்படுத்திக் கொடுக்காது என்பதால் அதில் பெரிதாக தலையிடாமல் இருக்கிறார்.

அந்த ஆடைக்காக அட்ஜெஸ்ட்மெண்டு

அதே சமயம் டிவி நிகழ்ச்சிகளின் மீது அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது கணவரை விவாகரத்து செய்ய இருந்தது குறித்து கூறியிருந்தார் அதில் கூறும்போது தன்னுடைய மகள்தான் அந்த விவாகரத்தை நிறுத்தி அவர்களை சேர்த்து வைத்ததாகவும் கூறியிருந்தார்.

ஆடையால் துயரத்துக்கு உள்ளான வி.ஜே அர்ச்சனா

இதன் மூலமாக அவரது மகளை மகளும் பலரும் புகழ்ந்து வந்தனர். இந்த நிலையில் வி.ஜே அர்ச்சனா இளம் வயதிலேயே ஏன் கவர்ச்சியான உடைகளை அணியவில்லை என்பது குறித்து பேட்டியில் கூறியிருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது ஆரம்பத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த பொழுது ஸ்லீவ்லஸ் உடைகளை அணிந்து கொண்டுதான் நடித்திருக்கிறேன்.

அப்போதைய சமயங்களில் ஸீல்வ்லஸ் உடைகளை அணிவது தவறு என்று எனக்கு தெரிந்தது. அதற்கே நிறைய நெகட்டிவ்வான விமர்சனங்கள் வந்தது அதற்கு பிறகு எனக்கு திருமணம் ஆன பிறகு ஸ்லீவ்லஸ் உடையையே நான் அணியவில்லை. அப்போதைய காலகட்டத்தில் அது மிகப்பெரும் தவறாக இருந்தது.

மேலும் இந்த மாதிரியான கவர்ச்சி உடைகளை அணிந்திருந்தாலே எங்களை தவறான போக்கில் பார்க்க துவங்கினார்கள். அதனாலேயே நான் அதை போடவில்லை என்று வெளிப்படையாகவே இந்த விஷயத்தை கூறியிருக்கிறார் வி.ஜே அர்ச்சனா.