தேதிய குறுச்சிட்டாங்க!.. பரபரப்பான தவெகா மாநாட்டு விபரங்கள்.. கெத்து காட்டும் தளபதி!

தமிழ் திரை படத்தில் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் தற்போது அரசியலில் களம் இறங்கி எம்ஜிஆர்ரை போல சாதிப்பாரா? அல்லது சீமானை போல வெத்து வேட்டாக மாறுவாரா? என்ற ரீதியில் தற்போது கலவை ரீதியான விமர்சனங்கள் இணையம் எங்கும் இடம் பிடிக்க ஆரம்பித்து உள்ளது.

இவர் இனி தீவிரமாக அரசியலில் பணிபுரிய இருப்பதால் கோட் மற்றும் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்து முடித்து திரை உலகை விட்டு வெளியேறி முழு நேர அரசியலில் களம் காண இருப்பதாக செய்திகள் வெளி வந்தது.

தளபதி விஜய்..

தளபதி விஜய் அரசியலில் களம் காண போகிறார் என்ற செய்திகள் வெளி வந்ததை அடுத்து அது சிவகாசி பட்டாசாய் நவித்து விடும் என்று நினைத்த பல அரசியல் கட்சிகளுக்கு தற்போது காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய வகையில் இவர் களம் இறங்கி இருக்கும் சம்பவம் உள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தீவிரமாக உறுப்பினர்களை சேர்க்கக் கூடிய பணிகள் ஆரம்பித்த இவர் மற்றும் இவரின் கட்சி பற்றி பலரும் பல்வேறு வகையில் கருத்துக்களை சொன்னதை அடுத்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய நிகழ்வுக்கு சவுக்கடி கொடுக்கக் கூடிய வகையில் இவர் அறிக்கைகளை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

இதனை அடுத்து இவரது அரசியல் நகர்வினை மிகவும் கவனத்தோடு ஒவ்வொரு அரசியல்வாதியும் கண்காணித்து வருகிறார்கள் என்று சொல்லக் கூடிய வகையில் தற்போது இவர் தனது கட்சிக்கான கொடியினை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தேதிய குறுச்சிட்டாங்க.. பரபரப்பான தவெகா மாநாட்டு..

இதனை அடுத்து கட்சிக்கொடி பற்றிய கருத்துக்களும் வெளி வந்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் கட்சி கொடியில் யானை இடம் பெற்று இருப்பது பெவிக்கால் விளம்பரம் போல் உள்ளது என்று பலர் இணையத்தில் ட்ரோல் செய்தார்கள்.

வேறு சிலரும் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை வைத்திருப்பதால் இந்த கொடி முடக்கப்படலாம் என்ற ரீதியில் பேசி வந்தார்கள்.

எனினும் அவற்றைப் பற்றி எந்தவிதமான கவலையும் கொள்ளாமல் தனது அரசியல் வாழ்க்கை தமிழக மக்களுக்கு பணியாற்றக் கூடிய வகையில் இருக்கும் என்று உறுதியோடு களம் இறங்க இருக்கும் தளபதி விஜய் தற்போது தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

இதை அடுத்து வேறு கட்சிகள் அனைத்தும் மிரண்டு போய் இருக்கக் கூடிய சூழ்நிலையில் இவரது கட்சி முதல் மாநாட்டை சென்னை திருச்சி போன்ற இடங்களில் நடக்க திட்டமிடப்பட்டதாக வெளி வந்த தகவல்களில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது. இதற்குப் பின்னணியில் அரசியல் காரணம் உள்ளதாகவும் புதைந்தது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் தாவெகா கட்சியின் முதல் மாநாடு வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதாக விஷயங்கள் வெளி வந்தது.

கெத்து காட்டும் தளபதி..

விஜய்யின் உத்தரவின் பெயரில் மாநாட்டுக்கு அனுமதி கோரி அதன் பொதுச்செயலாளர் புஷ்ஷி ஆனந்த் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் இடம் அனுமதி கோரி மனுவினை அளித்து இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

மேலும் இந்த தகவல் உறுதியான நிலையில் இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களை உள்ள நிலையில் மாநாட்டின் பணிகளை விரைவில் துவங்க கூடிய சூழ்நிலையில் அவர்கள் உள்ளார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த மாநாட்டில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தன்னுடைய முதல் மாநாட்டையே மிக பிரம்மாண்டமான முறையில் தளபதி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து தளபதி கெத்து காட்ட ஆரம்பித்துவிட்டார் என அவரின் ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.