மனைவியுடன் சகவாசத்தில் இருந்த நடிகர்… ரோட்டில் விட்டு அடித்த ஜெயம் ரவி.. ஆதாரம் இதோ.. ஷாக் கொடுத்த பிரபலம்..!

கடந்த இரு தினங்களாக ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி குறித்த விவாகரத்து விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் மூன்று மாதங்களுக்கு முன்பே ஜெயம் ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக பேசப்பட்டது. அதற்கு நிறைய காரணங்களும் கூறப்பட்டது. அதற்கு தகுந்தாற் போல ஆர்த்தியும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் நீக்கி இருந்தார்.

மனைவியுடன் சகவாசத்தில் இருந்த நடிகர்

எனவே கண்டிப்பாக இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தான் பேச்சுக்கள்  இருந்து வந்தன. அதற்கு தகுந்தார் போல ஜெயம் ரவி தனது எக்ஸ் பக்கத்தில் ஆர்த்தியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்தார்.

இந்த பிரச்சனை இதனையடுத்து சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. இந்த பிரச்சனை ஆரம்ப கட்டத்தில் பேசப்பட்டு வந்த பொழுதே இது குறித்து பயில்வான் ரங்கநாதன் நிறைய பேட்டிகளில் பேசியிருந்தார். இந்த நிலையில் அவரிடம் கேட்கும் பொழுது ஜெயம் ரவியின் குடும்பத்தார் எனக்கு குடும்ப நண்பர்கள்.

ரோட்டில் விட்டு அடித்த ஜெயம் ரவி

எனவே அவர்கள் இருவரும் விவாகரத்து பெறுவதில் எனக்கு விருப்பமே கிடையாது. அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். முன்பு நான் அவர்களது விவாகரத்து குறித்த வீடியோவில் பேசும்பொழுது கூட அதில் அவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் கூறியிருந்தேன் என்று கூறினார்.

அப்பொழுது தனுஷ்க்கும் ஆர்த்திக்கும் தொடர்பு இருந்ததாகவும் அது தெரிந்ததால் ஜெயம் ரவி அவருடன் சண்டை இட்டதாகவும் நீங்கள் கூறியுள்ளது உண்மையா? என்று பயில்வான் ரங்கநாதனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன் அது உண்மைதான் ஜெயம் ரவி மிகுந்த கோபமடைந்து தனுஷோடு ரோட்டிலேயே சண்டை போட்டார்.

ஷாக் கொடுத்த பிரபலம்

அதற்கான ஆதாரங்கள் கூட என்னிடம் இருக்கிறது. அப்போது பரவலாக அனைத்து செய்திகளிலும் அந்த விஷயம் வெளிவந்தது. என்று கூறி இருக்கிறார்.

ஏற்கனவே அரசல் புரசலாக தனுஷ்தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என்று ஒரு பக்கம் கூறப்பட்டு வந்தாலும் கூட யாருமே வெளிப்படையாக அதுக்குறித்து கூறவில்லை. இந்த நிலையில் தற்சமயம் பயில்வான் ரங்கநாதன் கூறி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.