“மார்பு குறித்து மோசமான கமெண்ட்..” நான் இன்னும் இதை பண்ணிட்டு தான் இருக்கேன்.. என நீலிமா ராணி பதிலடி..!

நடிகை நீலிமா ராணி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பிறகு சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் பிரபலமானார்.

தமிழில் நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் பெயர் சொல்லும் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடிகை நீலிமா ராணி.

இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இவர் சமீபத்தில் கொடுத்திருக்கக்கூடிய பேட்டி ஒன்று இணையத்தில் பேசு பொருளாக இருக்கிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் நீலிமா ராணி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்று கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாகவே சினிமா நடிகைகள் இணைய பிரபலங்கள் சீரியல் நடிகைகள் என தங்களுடைய புகைப்படங்களை வெளியிடும் பொழுது அவர்களுடைய அழகை வர்ணித்து கருத்து  ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் மோசமான முறையில் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கமெண்ட் செய்யும் ஆசாமிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

நடிகைகள் சில நேரங்களில் இப்படியான நபர்களுக்கு அவர்களுடைய கமெண்ட்க்கு ரிப்ளை செய்து பதில் கொடுப்பார்கள்.. இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடிக்கும்.

இந்நிலையில் நடிகை நீலிமா ராணி சமீபத்திய போட்டியில் தன்னுடைய மார்பகம் குறித்து மோசமான கருத்து தெரிவித்த நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

நடிகை நீலிமா ராணி காதலி திருமணம் செய்து கொண்டவர். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் பெயர் இசைவாணன், திரைத்துறையில் இல்லாவிட்டாலும் கூட திரைப்படங்களை தயாரிக்க ஆசைப்பட்டார். இதற்கு நீலிமா ராணியும் அவருக்கு துணை இருந்து ஒரு படத்தை தயாரித்தனர்.

ஆனால் அந்த படம் பாதியிலேயே நின்று போனது. இதன் காரணமாக கோடிக்கணக்கில் கடனாளி ஆனார் நடிகை நீலிமா ராணி. கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் கடன் பிரச்சினையில் சிக்கினார் நீலிமா ராணி.

இதனை சமீபத்தில் தான் அடைத்து முடித்தோம் என ஒரு போட்டியில் நீலிமா ராணி தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர் என்னுடைய மார்பகங்களை பற்றி மோசமான கமெண்ட் செய்யும்போது உடனே ஒன்று சொல்ல தோன்றும் அது என்னவென்றால் நான் இன்னும் என் குழந்தைகளுக்கு பால் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். பரவாயில்லை அவனுக்கு எல்லாம் பதில் சொல்லி என்ன ஆகப்போகிறது என்று நினைத்துக் கொண்டு அந்த கமெண்ட்டை டெலிட் செய்து விட்டு சம்பந்தப்பட்ட அந்த நபரை பிளாக் செய்து விடுவேன் என பேசி இருக்கிறார்.

மேலும், என்னுடைய உடல் எடை பற்றியும் மோசமான கருத்துக்கள் வரும் அதை எல்லாம் நான் கண்டு கொள்வதில்லை. எனக்கே தெரியும் உடல் எடை குறைப்பதற்கு ஒரு நேரம் எடுக்கும் என்று முக்கியமான இடத்தில் இப்போது இருக்கிறோம்.

இதைவிட நல்ல நிலைக்கு செல்ல நேரம் எடுத்து தான் செய்யும் நான் இரண்டு குழந்தைகளை பெற்றவள் இரண்டு முறை எனது உடலில் பெரிய பெரிய மாற்றங்கள் நடந்து இருக்கின்றன. இதை எல்லாம் புரிந்தால் தான் புரிந்ததால் தான் நான் இப்போது அமைதியாக இருக்கிறேன் என பேசி இருக்கிறார் நடிகை நீலிமா ராணி.