கதறி அழுத பாடகர் மனோ..! அப்பன் பெயரை நொடியில் நொறுக்கிய மகன்கள்..! வலி மிகுந்த வாழ்க்கையில் Mano..!

பிரபல பின்னணி பாடகர் மனோ பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார். தற்பொழுது பல்வேறு இசை நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு பிரபலமாக இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒரியா, ஹிந்தி என பல மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருப்பவர் பாடகர் மனோ.

இந்நிலையில் இவருடைய மகன் ரஃபி மனோ சில தினங்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பாடு வாங்க வந்த 16 வயது சிறுவன் மற்றும் 20 வயது இளைஞனை முட்டி போட வைத்து தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த கொடுமையான தாக்குதலில் அந்த 16 வயது சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார் எனவும் மனோவின் மகன்கள் ரஃபி மற்றும் சாஹிர் மற்றும் அவரது வீட்டில் பணியாற்றும் இருவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மனோ வீட்டில் பணியாற்றும் இருவரை தற்போது கைது செய்திருக்கும் நிலையில் மனோவின் மகன்கள் இருவரிடமும் விசாரணை நடத்த இருக்கின்றனர்.

பிரபலமான பின்னணி பாடகராக அறியப்படும் மனோவின் அவருடைய மகன்கள் இப்படி ஒரு மோசமான செயலில் ஈடுபட்டு இருப்பது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே சமயம், என்னுடைய மகன்கள் தலைமறைவாக இல்லை. தவறாக தகவல்கள் பரவி கொண்டிருக்கின்றன எனவும் பாடகர் மனோ கூறி இருக்கிறார்.

Summary in English : The police have set up a special team to search for playback singer Mano’s sons Rafi and Shakir. Let’s see its background. Playback singer Mano lives in sridevi kuppam AKR nagar in Valasarawakkam, Chennai.