பெரிய மனுசன் மாதிரி நடந்துக்கய்யா.. பருத்திவீரன் சரவணன் செயலால் கடுப்பான விஜய் சேதுபதி.. மேடையில் நடந்த சம்பவம்.!

வில்லனாக நடித்து கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற முடியும் என்று நிரூபித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. பெரும்பாலும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க மாட்டார்கள்.

ஏனெனில் வில்லனாக நடித்து விட்டால் பிறகு தொடர்ந்து வில்லனாக நடிப்பதற்குதான் வாய்ப்பு வரும். அதனால் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைத்து விடும் என்பது நடிகர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் வில்லனாக நடிக்கும் பொழுதுதான் ஹீரோவாக நடிப்பதை விட அதிக வரவேற்பை பெற்றார் நடிகர் விஜய் சேதுபதி.

பெரிய மனுசன் மாதிரி நடந்துக்கய்யா

மேலும் ஒவ்வொரு திரைப்படத்திலும் வில்லனாக நடிப்பதற்கும் கதாநாயகனாக நடிப்பதை விடவும் அதிகமாக சம்பளம் வாங்கினார் விஜய் சேதுபதி. அப்படி இருந்துமே கூட விஜய் சேதுபதிக்கு என்று தனி மார்க்கெட் இப்பொழுதும் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்பொழுதும் அவர் கதாநாயகனாக நிறைய திரைப்படங்கள் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக வில்லனாக நடித்தாலும் ஹீரோவாக வாய்ப்பு கிடைக்கும் என நிரூபித்தவர் நடிகர் விஜய் சேதுபதி.

நடிகர் விஜய் சேதுபதி நிறைய திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் பலருக்கும் நடித்து கொடுத்திருக்கிறார். ஆனால் இனிமேல் எந்த படத்திலும் இவர் வில்லனாகவும் நடிக்க போவதில்லை துணை கதாபாத்திரங்களாகவும் நடிக்க போவதில்லை என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.

கடுப்பான விஜய் சேதுபதி

ஏனெனில் அது அவருக்கே நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதால் இனிமேல் அந்த மாதிரி நடிக்க போவதில்லை என்று கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் அவர் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவான சார் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

இந்த படத்தில் விமல் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பேசிய விஜய் சேதுபதி இதில் பலரும் சூப்பராக நடித்திருக்கின்றனர் என்று பலரையும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

மேடையில் நடந்த சம்பவம்

அப்படி பேசிக் கொண்டிருந்த பொழுது அந்த படத்தில் நடித்திருந்த பருத்திவீரன் சரவணனும் அந்த பேட்டியில் கலந்து கொண்டிருந்தார். அவர் வேகமாக விஜய் சேதுபதியின் காலில் விழ வந்தார். அதனால் கோபம் அடைந்த விஜய் சேதுபதி பெரிய மனுஷன் போல நடந்துக்கோங்க சார் எதற்கு இப்படி பண்றீங்க என்று கேட்டுவிட்டார்.

ஆனால் அதை சிரித்துக்கொண்டுதான் விஜய் சேதுபதி கேட்டார். அதற்கு பதிலளித்த பருத்திவீரன் சரவணன் அடுத்து இன்னொரு படத்தில் இவருக்கு நான் தந்தையாக நடிக்கிறேன். அதனால் இப்பொழுதே நீ பெரிய மனுஷன் போல நடந்து கொள் என சொல்கிறார் என்று கூறியிருந்தார் பருத்திவீரன் சரவணன்.