என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் வெளியாகும் சமயத்தில் மட்டும்தான் மக்கள் பார்ப்பார்கள்.

ஆனால் சீரியலைப் பொறுத்தவரை தினம்தோறும் அவர்கள் பார்த்து வருவதால் அதில் நடிக்கும் நடிகைகள் மிகவும் எளிமையாகவே மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்து விடுகின்றனர். அதனை பயன்படுத்தி அவர்கள் சினிமாவிலும் வாய்ப்புகளை தேடத் தொடங்குகின்றனர்.

படுக்கைக்கு அழைத்தவர்:

அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்தான் நடிகை ரேஷ்மா பசுபுலேத்தி. ரேஷ்மாவை பொறுத்தவரை மற்ற நடிகைகள் சின்ன திரையில் முதலில் அதிக பிரபலமாகிவிட்டு அதன் பிறகு சென்று வெள்ளி திரையில் பிரபலமாவார்கள்.

ஆனால் ரேஷ்மாவை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே வெள்ளித்திரையில் அவர் பிரபலம் அடைந்து விட்டார். அதே சமயம் சின்ன திரையிலும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் முக்கியமான இடத்தை பிடித்தார் ரேஷ்மா.

அதற்கு பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதே சமயம் சீரியல்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் ரேஷ்மா.

இந்த இடத்தில் இருக்கேன்

அப்படியாக அவர் நடித்த பாக்கியலட்சுமி மாதிரியான சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. 2009 இல் இருந்து தமிழில் சின்னத்திரையில் நடித்து வந்து கொண்டிருக்கிறார் ரேஷ்மா. இதனால் அவர் பிரபலமான ஒரு சின்னத்திரை நட்சத்திரமாக இருந்து வருகிறார்.

அதே சமயம் சமூக வலைதளங்கள் என்று வரும் பொழுது அங்கு தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ரேஷ்மா. என்னதான் சீரியல்களில் புடவை கட்டிக்கொண்டு நடித்து வந்தாலும் கூட இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

 

சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா

இந்த நிலையில் ரேஷ்மாவிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் குறித்து கேட்ட பொழுது நான் அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களில் எல்லாம் சென்றது கிடையாது. அப்படி சென்றிருந்தேன் என்றால் நான்பெரிய பணக்காரியாகி இருப்பேன் இப்படி பேட்டிகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்திருக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் ரேஷ்மா. அவரது இந்த பேட்டி தற்சமயம் வைரலாக துவங்கியிருக்கிறது.